வடமேற்கு பாகிஸ்தானில் நவஷேரா அருகில் உள்ள ஜலோசாய் அகதிகள் முகாமில் நேற்று பயங்கர
குண்டு வெடிப்பு இடம்பெற்றது. முகாமில் உள்ளவர்களுக்கு மானிய பொருட்கள்
வழங்கப்பட்டுக் கொண்டிருந்த போது கார் தரிப்பிட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு
கார் திடீரென வெடித்துச் சிதறியது.
இதில் அப்பகுதியில் இருந்தவர்கள் தூக்கி
வீசப்பட்டனர். ஏராளமான வாகனங்கள் நொறுங்கின. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள்
உள்ளிட்ட 13 பேர் இறந்தனர். 30 பேர் பலத்த காயம் அடை ந்து மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.