எஸ்.எல்.பி.எல். போட்டி அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைப்பு
எஸ்.எல்.பி.எல். போட்டி அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைப்பு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இம்மாதம் நடத்தவிருந்த ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் சுற்றுப்
போட்டி, அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்ற இந்திய கிரிக்கெட் சபை
எதிர்பாராத விதமாக அனுமதிக்கப்படாதமை உட்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியமையே
இதற்குக் காரணம் என என்.டி.ரி.வி. தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 19ம் திகதி இச்சுற்றுப் போட்டி ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இச்சுற்றுப் போட்டிக்குப் பதிலாக வழக்கமான வகையில், 5 மாகாண அணிகளுக்
கிடையிலான சுற்றுப் போட்டியொன்றை நடத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்கவில்லை.
எனினும் இப்போட்டி களில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்ட தென்னாபிரிக்காவின் ஹேசல்
கிப்ஸ், இச்சுற்றுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டமை குறித்து தனக்கு
அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இப்போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான பொறுப்பை சிங்கப்பூரை தளமாகக் கொண்ட சொமாசெட்
என்டெர்டெய்ன், டமன்ட் வென்சார்ஸ் நிறுவனத்திடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்
வழங்கியிருந்தது.
ஆனால் இந்நிறுவனத்திற்கும் ஐ.பி.எல்.லின் சர்ச்சைக்குரிய முன்னாள் தலைவர் லலித்
மோடிக்கும் தொடர்பிருப் பதாக கூறி இந்திய கிரிக்கெட் சபை தனது வீரர்களை அனுப்ப
மறுத்தது எனினும் மோடிக்கும் இந்நிறுவனத்திற்கும் தொடர் பில்லை என இலங்கை விளையாட்
டுத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டும் கூறியமை குறிப்பிடத்தக்கது.