ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, DECEMBER,23, 2010
மேற்கிந்திய வீரர் ஷில்லிங்போர்டுக்கு தடை
மேற்கிந்திய வீரர்
ஷில்லிங்போர்டுக்கு தடை
சர்ச்சைக்குரிய முறையில் பந்து வீசிய மேற்கிந்திய தீவுகளில் ஷேன் ஷில்லிங்போர்டுக்கு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தடை விதித்தது.
மேற்கிந்திய அணியின்
சுழற்பந்து வீச்சாளர் ஷேன் ஷில்லிங் போர்ட் (27) சமீபத்தில் தென்னாபிரிக்காவுக்கு
எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆனார்.
இலங்கைக்கு எதிரான காலி டெஸ்ட் போட்டியின்
போது இவரது பந்து வீச்சு சந்தேகம் அளிப்பதாக நடுவர்களான ஸ்டீவ் டேவிஸ் ரிச்சர்ட்
கெட்டில்புரோ மற்றும் தொலைக்காட்சி நடுவர் ஆசாத் ரவூப், ஜயவர்தன ஆகியோர்
ஐ.சி.சி.யிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஐ.சி.சி..சார்பில் கடந்த 9 ஆம் திகதி
கபர்த்தில் ஷில்லிங்போர்டுக்கு சோதனை நடத்தப்பட்டது.
இதில் பந்து வீச்சு செய்யும் போது விதியை மீறி (15 டிகிரி) இவரது முழங்கை 17 டிகிரி
அளவுக்கு வளைவது உறுதியானது.
இதையடுத்த அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்
பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து 14 நாட்களுக்குள்
ஷில்லிங்போர்ட் மேன்முறையீடு செய்யலாம் என்றும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.