எனது மக்களுக்காக புலிப் பட்டத்தையும் ஏற்க நான் தயாராகவே உள்ளேன்
எனது மக்களுக்காக புலிப் பட்டத்தையும்
ஏற்க நான் தயாராகவே உள்ளேன்
சுசிலுக்கு விஜயகலா மகேஸ்வரன் சாட்டை
எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து நான் குரல் கொடுக்கும் போது எனக்கு புலிச்
சாயம் பூசுவதற்கு தென்பகுதியில் எதிரணியினர் முனைந்து வருகின்றனர். இறுதி
யுத்தத்தின் போது இனப் படுகொலையினை மேற்கொண்ட இவர்கள் இன்று என்மீது புலி முத்திரை
குத்த முனைகின்றனர். முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காக நான் அங்கு
சென்று அஞ்சலி செலுத்தியிருந்தேன். பிரதி அமைச்சராக அரசாங்கத்திலிருந்து கொண்டு
பலியான பொது மக்களுக்கு முள்ளி வாய்க்கால் சென்று நான் அஞ்சலி செலுத்தினேன்.
அப்போதும் என்னை புலி என்று முத்திரை குத்தினர். எமது மக்களுக்காக நான் குரல்
எழுப்பும் போதும், செயற்படும் போதும் எனக்கு புலிப் பட்டம் சூட்டப்படுகின்றது.
இவ்வாறான பட்டங்களை எல்லாம் நான் எனது மக்களுக்காக ஏற்றுக்கொள்வதற்கு தயாராகவே
உள்ளேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளரும் மகளிர்
விவகார பிரதி அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஆட்சி உருவாவது நிச்சயமாகிவிட்டது. மாற்றுக்
கொள்கைகளுக்கான நிலையம் நடத்திய ஆய்வில் இது நிரூபணமாகியுள்ளது. எனவே புதிய
ஆட்சியில் பங்கேற்க நாம் தயாராக வேண்டும். இதற்கு எமது பிரதிநிதித்துவத்தை தவறாது
நீங்கள் அதிகரிக்க வேண்டும்.