முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ வேண்டுமா? ஐ.தே.க விற்கு வாக்களியுங்கள்
முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ வேண்டுமா?
ஐ.தே.க விற்கு வாக்களியுங்கள்
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்
இந்த நாட்டையும் குறிப்பாக முஸ்லிம்களையும் அழித்துக்கொண்டிருந்த மஹிந்தவின்
ஆட்சிக்கு அனைத்து முஸ்லிம்களின் உதவியுடன் ஜனவரி 8 ஆம் திகதி அன்று முற்றுப்புள்ளி
வைத்தோம். மஹிந்தவைத் தோற்கடிக் கலாம் என்று எவரும் நம்பவில்லை. முஸ்லிம் காங்கிரஸ்
பல கட்சிகளுடன் இணைந்து இந்த நாட்டில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதுதான் ஆட்சி
மாற்றம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் ஒன்றிணைந்து
மஹிந்தவின் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிரசாரம் செய்து
வெற்றி கண்டதாக அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம்
தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ
முடியும். அதுவே உண்மை என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே இனிவரும் காலத்தில் இந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ
வேண்டுமாயின் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கே தமது
வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் ஹக்கீம் கேட்டுக்கொண்டார். ஐக்கிய தேசியக்
கட்சியின் ஆட்சியில்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும். கடந்த காலங்களில்
முஸ்லிம்கள் பெரும் துன்பத்தை அனுபவித்தனர். நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுவதற்கு
பெண்களால் பள்ளிவாசல்களுக்குச் செல்ல முடியவில்லை. கிaஸ் பூதங்கள் அவர்களை விரட்டின.
அந்தப் பெண்களைப் பாதுகாக்க ஆண்கள் கம்பு, தடிகளுடன் காவல் காக்கும் நிலை
ஏற்பட்டிருந்தது. இனிமேல் அந்த நிலை ஏற்படாது என்றார்.