கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக தமது உரிமைகளுக்காகப் போராடிவரும் தமிழர்களின்
உரிமைக் கோரிக்கையை தென்பகுதியில் வாழ்ந்து வரும் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதமாக
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விதைத்து வருகிறார் என மூத்த ஊடகவியலாளர்
வீ.தனபால சிங்கம் லங்காசிறி 24 எனும் இணை யத்தள செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட
நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
நடக்கவிருக்கும் தேர்தல் எதை உணர்த்துகிறது? வடக்கு கிழக்கு மக்களின் அரசியல்
சூழ்நிலை எப்படி மக்கள் கைகளில் பொறுப்பாக் கப்பட்டிருக்கிறது? தமிழ் முஸ்லிம்
மக்களின் மனங்களில் தேர்தல் தொடர்பான நிலைப்பாடு எப்படியிருக்கின்றது? சர்வதேசத்தின்
நிலைப்பாட்டில் இத் தேர்தல் எவ்வகையான தாக்கத்தினை செலுத்த போகின்றன என்பது
தொடர்பாக லங்கா சிறி 24 வானொலிச் சேவை எழுப்பிய கேள்விகளுக்கும் ஊடகவியலாளர்
தனபாலசிங்கம் பதிலளித்துள்ளார்.