ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அத்வானி திடீர் இராஜினாமா

அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அத்வானி திடீர் இராஜினாமா

பாரதீய ஜனதாக் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மூத்த தலைவர்கள் அத்வானி இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் அளித்த இராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தற்போது கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் தங்களது தனிப்பட்ட ஆதாயத்துக்காக மட்டும்தான் செயற்படுகிறார்கள். இவ்வகையில், தனிநபர் ஆதாயத்துக்காக செயல்படுபவர்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினமாகவுள்ளது.

பா.ஜ.க.வை ஆரம்பித்த தலைவர்கள் எதிர்பார்த்த பாதையில் கட்சி இப்போது செல்லவில்லை. ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய் போன்ற தலைவர்களால் எந்த நோக்கத்துடன் பா.ஜ.க. தொடங்கப்பட்டதோ அந்த சிந்தாந்தத்தின்படிதான் தற்போது கட்சி செல்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, பா.ஜ.க.வில் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக்கொள்ளுகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு பாராளுமன்றக் குழு மற்றும் தேர்தல் குழு ஆகியவற்றில் அத்வானி பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி