ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று வாழும் இலங்கையருக்கு இரட்டை பிரஜாவுரிமை

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று வாழும் இலங்கையருக்கு இரட்டை பிரஜாவுரிமை

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று அங்கு வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசு தீர் மானித்துள்ளதாக குடிவரவு, குடிய கல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரி வித்தார்.

வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்ற இலங்கையர் 3 முதல் 5 இலட்சம் பேர்வரை ஐரோப்பா உட் பட பல்வேறு நாடுகளிலும் வசிக் கின்றனர். அவர்கள் இலங்கைப் பிர ஜைகளாக இலங்கை வர விருப்பமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ளோர் அங்கு பிரஜாவுரிமை பெற்ற பின்னர் இலங்கை பிரஜா உரிமை இரத்தாகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் இலட்சக்கணக்கான இலங்கையரின் கோரிக்கையின் பேரில் புதிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் ஒரு இலட்சம் பேருக்கு இரட்டைப் பிரஜாஉரிமை வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

(எப் எம்.)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி