வரு. 78 இல. 167

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 07
விகிர்தி வருடம் ஆனி மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JULY 19, 2010

நடிகை நயன்தாரா மயக்கம்

நடிகை நயன்தாரா மயக்கம்

ஓய்வு எடுக்க டொக்டர்கள் அறிவுரை

சினிமா படப்பிடிப்பின்போது நடிகை நயன்தாரா மயங்கி விழுந்தார். அவரை ஓய்வு எடுக்கும்படி, டொக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.

‘நான் கடவுள்’ படத்தை தயாரித்த கே. எஸ். சீனிவாசன், கே. எஸ். சிவராமன் ஆகிய இருவரும் ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் ஆரியா கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். ராஜேஷ் டைரக்ட் செய்கிறார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்தரா ஸ்டூடியோவில் நேற்று முன்தினம் படப்பிடிப்பு நடந்தது. ஆரியா, நயன்தாரா இருவரும் ஜோடியாக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

பிற்பகல் 2 மணி அளவில் படப்பிடிப்பு நடந்துகொண்டி ருந்தபோது திடீர் என்று நயன்தாரா மயங்கி விழு ந்தார்.

இதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நயன்தாராவுக்கு மயக்கம் தெளிவிக்கும் முயற்சியில் படப்பிடிப்பு குழுவினர் ஈடுபட்டார்கள். டொக்டருக்கும் தகவல் பறந்தது. டொக்டர் வந்து நயன்தாராவை பரிசோதித்தபோது அவர் காலையில் இருந்தே சாப்பிடாமல் இருந்தது தெரியவந்தது.

மிகவும் சோர்வா கவும், பலவீனமாகவும் அவர் காணப்பட்டார்.

அவரை நேரத்துக்கு சாப்பிடும்படியும், சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி யும் டொக்டர்கள் அறிவுரை கூறினார்கள். அதன்படி நயன்தாரா ஓய்வு எடுத்து வருகிறார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »