மதுரையில் அமைந்துள்ள தமிழ் நாடு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின்
உதவியுடன் 30,000 மல்லிகைக் கன்றுகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடிக்கருகில் உள்ள தம்பிப்பிள்ளை பிரேமாணந்தராஜாவுக்குச்
சொந்தமான பண்ணையில் இந்தக் கன்றுகளை வைபவரீதியாக நாட்டிவைக்கும் வைபவம் வட மாகாண
ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்கார, யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன்
ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.