எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தொகுதி வாரி அடிப்படையில் நடத்த நடவடிக்கை
எடுப்பதாக உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா
தெரிவித்துள்ளார். கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை சந்தித்த
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். .