புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
டென்மார்க் மேற்குபிராந்திய உயர் நீதிமன்ற ஜுரர் சபைக்கு இலங்கைத் தமிழர் நியமனம்

டென்மார்க் மேற்குபிராந்திய உயர் நீதிமன்ற ஜுரர் சபைக்கு இலங்கைத் தமிழர் நியமனம்

டென்மார்க் நாட்டின் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நற்பெயருக்கு மகுடம் சூட்டும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு தர்மா தர்மகுலசிங்கம் வெஸ்ட் லேண்ட் நீதிமன்றத் தின் ஜுரர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

டென்மார்க்கின் மிகப் பெரிய வழக்குகளை விசாரி க்கும் மன்றாக வெஸ்ட் லேண்ட் நீதிமன்றம் திகழ் கின்றது. இங்கு தமிழர் ஒருவர் ஜுரர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதல் தடவையாகும். சுமார் 31 ஆண்டுகளாக் டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து வரும் திரு. தர்மாதர்மகுலசிங்கம் கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்ற ஜுரர் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

மெடன்மார்க் நாட்டின் அரசியல், சமுதாயம், கலை, இலக்கியம், மனித உரிமைகள் என்று பல்துறைகளிலும் கால்பதித்து அந்நாட்டு புலம்பெயர்ந்தோர் வரலாற்றில் பல காத்திரமான சாதனைகளை படைத்துள்ளார். அது மாத்திரமன்றி, டென்மார்க் சோஷிலிச ஐனநாயகக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் செயற்படு கின்றார்.

முற்போக்கு சிந்தனைமிகு இலக்கிய வாதியாகவும், எழுத்தாளராகவும் விளங்கும் திரு. தர்மா தர்மகுலசிங்கம் டேனிஸ் மொழியில் வெளியான கோ. சி. ஆனர்சன் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து நூலாக்கம் செய்துள்ளார். இவ் நூலுக்கு 1997ஆம் ஆண்டிற்கான இலங்கை சாகித்திய விருது கிடைக்கப்பெற்றதே புலம் பெயர் இலக்கியத்தின் சிறப்புமிகு வரலாறாகும்.

இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் எஸ். பொவின் படைப்புக்களை டென்மார் க்கில் அறிமுகம் செய்து வைத்த பெருமையும் திரு தர்மகுலசிங்கத்தை சாரும். இவரோடு இணைந்து பணியாற்றியதில் காலஞ்சென்ற டென்மார்க் கவிஞர் எம். சி. லோகநாதனுக்கும் முக்கிய பங்குண்டு.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற கால கட்டத்தில் டென்மார்க், வயன் நகர கலை, இலக்கிய மன்றத்தின் சமாதானத்தூதுக்குழு திரு தர்மா தர்மகுலசிங்கம் தலைமையில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது. இத்தூதுக்குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய தலைவர் களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர்.

நீதித்துறையில் நீண்ட கால அனுபவமுள்ள திரு தர்மா தர்மகுலசிங்கம் டென்மார்க் நாட்டின் புலம் பெயர் தமிழர்கள் நீதியை நிலை நாட்டுவதில் முன்னின்று உழைக்கின்றார்கள். என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார் என்பதில் இலங்கையர்களாகிய நாமும் பெருமைப்படு கின்றோம்.

தகவல் : இளநெஞ்சன் முர்ஷிதீன்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.