இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க சீரான முறையில் வாக்குச் சாவடிகள்
இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க சீரான முறையில் வாக்குச் சாவடிகள்
(கே. அசோக்குமார்)
இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கும் விதத்தில் ஒழுங்கான முறையில்
வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க
உறுதியளித்துள்ளார்.
அத்துடன் இடம்பெயர்ந்துள்ள மக்கள் வதியும் பகுதிகளிலேயே வாக்களிக்க
தகுதியுள்ளவர்களின் பட்டியலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல்
ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் நடைமுறையில் கடந்த வாக்கெடுப்பின் போது
குளறுபடிகள் நடந்ததாக தேர்தல் ஆணையாளரிடம் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்த லின் போது இடம்பெயர்ந்தவர்களு க்கென அமைக்கப்பட்ட
வாக்குச் சாவடிகள், வாக்களித்த முறை பற்றி தான் திருப்திய டைவதாக தேர்தல் ஆணையாளர்
தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.