பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 8 பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்
பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய
8 பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்
உலக கோப்பையில் விளையாடும் 14 நாட்டு அணிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டு உள்ளன. பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் கேப்டன் அப்ரிடி, தொடக்க வீரர்
n'சாத் உட்பட 8 பாகிஸ்தான் வீரர்கள் பாதுகாப்பு விதி முறைகளை மீறியுள்ளனர்.
இந்த 8 பேரும் இரவில் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்டு அரட்டை அடித்து விட்டு 45
நிமிட நேரம் தாமதமாக ஹோட்டலுக்கு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு
அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதே மாதிரி மீண்டும் விதிமுறைகளை மீறினால்
போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஒழுக்க விதிமுறைகளை மிறியதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். அதோடு தாங்கள் அதே
மாதிரியான தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தனர். பாகிஸ்தான் அணி
தொடக்க ஆட்டத்தில் இந்தியாவை வருகிற 15-ம்திகதி அடிலெய்டில் சந்திக்கிறது.