அமைச்சரின் எருமைகளை கண்டுபிடிக்க போராடிய 3 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
அமைச்சரின் எருமைகளை கண்டுபிடிக்க
போராடிய 3 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
லக்னோ, உத்தர பிரதேச மாநில சிறுபான்மையினர் மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
அசாம் கானின் எருமைகள் 7 காணவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து அம்மாநில பொலிஸார் குழு ஒன்றை அமைத்து எருமைகளை தேடும் பணியில்
ஈடுபட்டுள்ளனர். மூன்று பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் இந்த பணியில் ஈடுபட்டனர்.
எருமைகள் காணாமல் போன விவகாரத்திற்கு முன்னுரிமை கொடுத்த பொலிஸார், மோப்ப நாய்கள்
கொண்ட குழுவுடன் எருமைகளை மீட்க மிகவும் தீவிரமாக பணியில் ஈடுபட்டனர். விசாரணையில்
திருடர்கள் எருமைகள் கட்டி போடப்பட்டிருந்த இரும்பு சங்கிலியை துண்டித்து அவற்றைக்
கொள்ளையடித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணியில்
ஈடுபட்டனர்.
பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் தற்போது மூன்று பொலிஸ் அதிகாரிகள்
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.