ரூ. 3 ஆயிரம் கோடியில் தேசிய புவியியல் தகவல் தொடர்பு மையம்
ரூ. 3 ஆயிரம் கோடியில் தேசிய புவியியல் தகவல் தொடர்பு மையம்
ஜம்முவில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவிப்பு
3 ஆயிரம் கோடி ரூபா செலவில் தேசிய புவியியல் தகவல் தொடர்பு மையம் நிறுவப்படும் என
பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அறிவியல் தொடர்பு மையம் ஆறு நாள் கருத்தரங்கை தொடங்கி வைப்பதற்காக ஜம்மு
சென்றுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச அறிவியல் ஆய்வு மற்றும் வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்றுவதாக பிரதமர்
பெருமிதமாகக் கூறினார்.
நியூட்ரினோ ஆய்வு மையம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமரின் வருகையை ஒட்டி ஜம்முவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜம்முவில்
நடைபெறும் ஆறுநாள் கருத்தரங்கில் பங்குபெற உலகம் முழுவதிலும் இருந்து வல்லுநர்கள்
அங்கு குவிந்துள்ளனர்.