பாராளுமன்ற தேர்தல் கூட்டணி விவகாரம் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்படவில்லை
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி விவகாரம்
காங்கிரஸ் கட்சி தனித்து விடப்படவில்லை
மத்திய மந்திரி நாராயணசாமி
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துவிடப்படவில்லை
என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.
மத்திய மந்திரி நாராயணசாமி புதுவையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு
பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டு வாசலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு
வைக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தர பிரதமர் மன்மோகன் சிங்,
உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேவுக்கு உத்தரவிட்டுள் ளார். எனக்கும் எனது
குடும்பத்தாருக்கும் பாதுகாப்பினை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
புதுவையில் கடந்த 2 ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. வீடு நிலம் அபகரிப்பு,
சங்கிலி பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வெடிகுண்டு கலாசாரமும்
பெருகி வருகிறது. புதுவையில் மத்திய மந்திரிக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண
மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? இந்த வெடிகுண்டு சம்பவத்தை கண்டித்து
எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம்
நடந்தது. இதற்கு ஆதரவு அளித்த பொதுமக்கள், வர்த்தகர்கள் என அனைத்துத் தரப்பட்ட
மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் ஒருசிலர், வெடிகுண்டை காங்கிரசே வைத்துவிட்டு நாடகமாடுவதாக கூறுவது
வேடிக்கையாக உள்ளது. புதுவையில் இதுபோன்ற கேவலத்தை யாரும் செய்யமாட்டார்கள்.
இதுபோன்ற வெடிகுண்டை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என்று எங்குமே பயன்படுத்துவ தில்லை
என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் புதுவை நிருவாகத்துக்கு
ஒரு சவாலாக உள்ளது. புதுவை அரசு தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு ஒத்துழைக்க
வேண்டும். மத்திய அரசு அளித்துள்ள கூடுதல் பாதுகாப்பு எனக்கு தர்ம சங்கடத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.
புதுவை பொலிஸாரிடம் வெடிகுண்டு களை செயலிழக்க செய்யும் அளவுக்கு திறமையில்லை. இந்தத்
திறமையை உருவாக்க ஐதராபாத், டில்லி உள்ளிட்ட இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.