வாஷிங்டன், அமெரிக்காவில் ஹ¥ஸ்டனில் டல்லாஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுமீத் தவான்.
அவருடைய மனைவி பல்லவி தவான் (வயது 38) இவர்கள் இந்திய வம்சாவளியினர் ஆவர்.
இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருந்தான். இந்நிலையில், வியாபார விஷயமாக 3 வாரங்கள்
வெளியூர் சென்றுவிட்டு, சுமீத் தவான், வீட்டுக்கு திரும்பினார். அப்போது, அவருடைய
மனைவி இல்லை. குளியலறைக்கு சென்று பார்த்த போது, அங்குள்ள தொட்டியில் அவருடைய மகன்
பிணமாக கிடந்தான்.
இதுபற்றி பொலிஸ¤க்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில் பல்லவி, மகனை கொன்று விட்டு,
குளியலறை தொட்டியில் பிணத்தை போட்டது. தெரிய வந்தது.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். 2 நாள் சிறைவாசத்துக்கு பிறகு, 50 ஆயிரம்
டொலர் பிணையில் விடுதலையானார். அவர் மனக் குழப்பத்தில் இருப்பதாக கணவர்
தெரிவித்தார்.