உலகிலேயே மிகவும் சிறப்பான ஒரு அழகு பொருள் என்று சொன்னால், அது தண்ணீர் தான்
தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நிறைய நன்மைகள்
கிடைக்கின்றன. அதிலும் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் நன்கு
ஆரோக்கியமாக செயல்படும். தண்ணீரை தினமும் தவறாமல் குடித்து வந்தால், எந்த ஒரு பக்க
விளைவும் இல்லாமல், சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.
ஏனெனில் தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால், நச்சுக்களால் உடல்
மட்டுமன்றி, சருமம் மற்றும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கிறது.
தடுக்கும் தண்ணீர் குடித்தால், இளமையிலேயே சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை
தவிர்க்கலாம்.
நீர்ச்சத்து உடலில் குறைவாக இருந்தால், கண்கள் பொலிவிழுந்து காணப்படும். எனவே
தண்ணீரை தினமும் போதிய அளவில் குடித்து வந்தால், நீர்ச்சத்து அதிகரித்து கண்கள்
பளிச்சென்று காணப்படும். மேலும் தண்ணீரைக் கொண்டு பொலிவிழந்த கண்களை கழுவினாலும்,
கண்களில் உள்ள நச்சுக்கள் வெளியேறி கண்கள் அழகாக இருக்கும்.
முதுமையை தடுக்கும்இளமையை தக்க வைக்க தண்ணீர் ஒரு சிறந்த மருந்து ஏனெனில் இது
சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை சீராக பராமரித்து, சுருக்கம், சரும வறட்சி போன்றவற்றை
தடுத்து, எப்போதும் இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். உதடுகளின் அழகைக் கெடுப்பதே
வறட்சி தான். ஆகவே அத்தகைய வறட்சியை போக்க, தண்ணீர் அதிகம் பருகினால், போதிய
நீர்ச்சத்து கிடைத்து, உதடுகள் எப்போதும் அழகாக வெடிப்புக்களின்றி இருக்கும்.
எடைகுறைய
தண்ணீர் அதிகம் குடித்தால், சாப்பிடும் அளவு குறைந்து, செரிமான மண்டலம் சீராக இயங்கி,
உடல் எடை குறைவிற்கு பெரிதும் துணையாக உள்ளது.