எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை ஒடுக்கும் பாதுகாப்பு படையினரின்
நடவடிக்கையின் ஒரு கட்டமாக அதன் ஊடக பேச்சாளர் அஹமட் ஆரிப் நேற்று கெய்ரோவில் கைது
செய்யப்பட்டார்.
ஆரிப் நஸ்ர் நகரில் உள்ள தனது சிற்றப்பா வீட்டில் தங்கியிருக்கும் தகவல் பாதுகாப்பு
படையினருக்கு தெரியவந்ததையடுத்து நேற்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக
செய்திகள் குறிப்பிட்டுள்ளன. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஆர்ப்பாட்டக்
காரர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டியது தொடர்பில் அதன் ஊடக பேச்சாளருக்கு உள்ள
பங்கு குறித்து சட்ட மா அதிபர் விசாரணை நடத்த உத்தரவிட்டதையடுத்தே அவர் உடனடியாக
கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் லுதினன்ட் மொஹமட் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
ஏற்கனவே முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உயர்மட்ட தலைவர் உட்பட பெரும்பாலான
தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.