துபாய் பகிரங்க டென்னிஸ் தொடரில், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா சம்பியன்
பட்டம் வென்றார். பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் தொடர் துபாயில் நடந்தது.
இதன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா,
இத்தாலியின் சாரா இரானியை சந்தித்தார். முதல் செட்டில் 6-2 என, கிவிட்டோவா வென்றார்.
இரண்டாவது செட்டை, 6-1 என வென்ற இரானி பதிலடி கொடுத்தார்.
பின் சுதாரித்துக் கொண்ட
கிவிட்டோவா மூன்றாவது செட்டை6-1 என எளிதாக தன்வசப்படுத்தினார். முடிவில், செக்
குடியரசின் கிவிட்டோவா 6-2, 1-6, 6-1 என்ற செட்களில் வென்று, சம்பியன் பட்டம்
வென்றார்.