ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

யாழ். மாவட்டத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 190 பேர் கைது

யாழ். மாவட்டத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 190 பேர் கைது

யாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடைய குற்ற வாளிகள் 190 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ்ப் பாணத்திற்கு இடமாற்றலாகி வந்துள்ள புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் கருணாரத்தின தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். யாழ்ப்பாண பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் பிடியாணை பிறப் பிக்கப்பட்ட 32 பேரும், களவு சம்பந்தமாக 11 பேரும், ஏனைய குற்றங்கள் சம்பந்தமாக 08 பேரும், வீதி விபத்துகளுடன் தொடர்புடைய 06 பேரும், அடித்து காயப்படுத்தியது சம்பந்தமாக 34 பேரும், குடித்துவிட்டு கலகம் விளைவித்த 09 பேரும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 05 பேரும், சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுப் பணம் வைத்திருந்த 02 பேரும், சுற்றுச் சூழல் சுகாதார சீர்கேடு காரணமாக 08 பேரும், சந்தேகத்தின் பேரில் 08 பேரும், குற்றங்களுடன் தொடர்புடைய வர்களெனக் கருதப்பட்ட 05 பேரும் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் நீதிமன்றங்களின் முன் ஆஜர்படுத்தப் பட்டுள்ளார்கள் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி