ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, OCTOBER, 22, 2010
பொலிஸ் மா அதிபரிடம் ஜனாதிபதி அறிக்கை கோரல்
ஊடகவியலாளர் மீதான தாக்குதல்
பொலிஸ் மா அதிபரிடம்
ஜனாதிபதி அறிக்கை கோரல்
(ஸாதிக் ஷிஹான்)
பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள்
தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா
அதிபரிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய
ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இதேவேளை, தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் பொலிஸ் மா அதிபரிடம் தானும்
தனியான அறிக்கை கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (ரு- து)