ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, OCTOBER, 21, 2010
பாடசாலைகளில் மூலிகை பூங்காக்கள்
பாடசாலைகளில் மூலிகை பூங்காக்கள்
(கிரித்தலை குறூப் நிருபர்)
பொலன்னறுவை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் மூலிகைப் பூங்காக்கள்
அமைக்கும் வேலைத் திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்த வடமத்திய மாகாண சபையின் சுதேசிய
வைத்திய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
வடமத்திய மாகாண சபையின் சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சினால் இந்த செயல்
திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் ஒவ்வொரு கோட்டக் கல்விப் பிரதேசத்திலும் தலா
04 பாடசாலை வீதம் தெரிவு செய்யப்பட்டு மூலிகைப் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றன. (ஐ)