வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009


வெற்றுப் பீப்பாவை வெட்டும் போது வெடித்தது!

வெற்றுப் பீப்பாவை வெட்டும் போது வெடித்தது!

இரசாயனம் இருந்த வெற்று தகர பீப்பா ஒன்றை வெட்டும் போது, அந்தப் பீப்பா திடீரென வெடித்ததனால், கராஜில் இருந்த இருவர் பலத்த காயங்களுடன் மாத்தறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் மாத்தறை - வெவஹமந்து பிரதேசத்தில் உள்ள கராஜ் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

கராஜ் உரிமையாளரும், வெல்டிங் பண்ணியவருமே காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவர் வெற்று பீப்பா ஒன்றை கராஜில் கொடுத்து தண்ணீர் நிறைக்கக் கூடிய விதமாக, பீப்பாவை வெட்டித் தருமாறு கேட்கவே கராஜ் உரிமையாளரும், வெல்டிங் பண்ணியவரும் இந்த பீப்பாவை வெட்டும் போது இது வெடித்துள்ளது.

இந்த வெடிப்பு சத்தம் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டதாக பிரதேச வாசிகள் கூறினார்கள். (ஐ - ஞ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •