புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 
ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஓய்வ+தியம்

ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஓய்வ+தியம்

பிரதமரின் பணிப்புரைக்கமைய ஏற்பாடு

ஓய்வூதியக் கொடுப்பனவில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட விருப்பதாக ஓய்வூதியத் திணைக்களம் அறிவித் துள்ளது.

இந்த முரண்பாட்டைத் தீர்க்கும் நோக்கில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அதிகரித்த ஓய்வூதியத்தை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற 337,000 பேர் நன்மையடையவுள்ளனர். அதிகரித்த ஓய்வூதியத்தை வழங்குவதற்காக திறைசேரி 1500 மில்லியன் ரூபாய்களை திணைக் களத்துக்கு விடுவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு ஓய்வூதியக் கொடுப்பனவு முரண்பாடு தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டது. இது தொடர்பில் 6/2006 சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருந்தது.

2015.06.25 வெளியிடப்பட்ட 16/2015 என்ற நிர்வாக சுற்றுநிருபத்தின் கீழ் அதிகரித்த ஓய்வூதியக் கொடுப்பனவை 2015.07.01 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்குமாறு பணிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய ஓய்வூதியம் பெறுபவர்கள் 2500 ரூபா முதல் 10,000 ரூபாவரை அதிகரித்த ஓய்வூதியத்தைப் பெறவிருப்பதாக ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.