புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 

தோல்விக்கு அஞ்சும் மஹிந்த இனவாதத்தை தூண்டுகிறார்

பிரதமர் ரணில் குற்றச்சாட்டு

தோல்விக்கு அஞ்சும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களிடையே இனவாதத்தை தூண்டி வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். தோல்வியைக் கண்ட மஹிந்த இன்று தான் செய்தவற்றை மறந்தும், மறைக்கவும் இனவாத அடிப்படையில் செற்படுகின்றார். வடக்கு கிழக்கை துண்டாக பிளவடையச் செய்ய நான் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதாக மஹிந்த பொய்யுரைத்து வருகிறார். அவர் செய்த தவறுகளை பட்டியலிட்டால் அவரால் எதிர்காலத்தில் அரசியலே செய்ய முடியாது போய்விடும். ஆனால் அவரைப் போன்று அநாகரிகமாகச் செயற்பட நான் தயாரில்லை. 2005 ஆம் ஆண்டில் தமிbழ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டு புலிகளுக்கு 200 மில்லியன் ரூபா பணம் வழங்கியே மஹிந்த அன்றைய தேர்தலில் வெற்றியீட்டினார். அன்று பிரபாகரன் எனக்கும் ஓர் தகவலை அனுப்பி வைத்திருந்தார். மஹிந்தவை விடவும் அதிகளவு பணம் வழங்கினால் எனது வெற்றியை உறுதி செய்ய முடியும் என பிரபாகரன் எனக்கு தகவல் அனுப்பியிருந்தார்.

விவரம்

 

கொழும்பு, கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்றுக் காலை இடம் பெற்றபோதுசுவாமி தேரில் வீதியுலா வருவதைப் படத்தில் காணலாம். (படம்:-எஸ். பாலா சிந்தக மாறசிங்க)


வாக்காளர்களுக்கு ஜனாதிபதி சிறிசேன ஆலோசனை

எதிர்வரும் பொதுத் தேர் தலில் பாரா ளுமன்றத்துக்கு பொருத்தமான வர்களை மட் டுமே தெரிவு செய்ய வேண்டி யது நாட்டில் உள்ள எல்லா வாக்காளர்களி னதும் மிகப் பெரும் பொறுப் பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நற்பெயரை மதித்து பாதுகாக்கின்ற, நாட்டுக்காக பணி செய்யக்கூடிய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்கள் தங்களது அறிவு,

விவரம்»

மஹிந்த மீண்டும் வந்தால் சீரழிவுதான்

எச்சரிக்கிறார் சந்திரிகா

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை சீரழித்து விடுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித் துள்ளார். அகலவத்தையில் நடைபெற்ற கூட்ட மொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு தெரிவித்தார்.

 விவரம்»

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்தியது

நான் செய்த மிகப் பெரிய தவறு

மனம் வருந்துகிறார் மஹிந்த

இருவருட காலம் ஆட்சியிலி ருக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தும் கடந்த ஜனவரி மாதம் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தியது, தான் செய்த மிகப் பெரிய தவறான முடிவு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த ஒரு முடிவைத் தவிர தனது ஆட்சியில் தான் எடுத்த எந்த முடிவு குறித்தும் தனக்கு வருத்த மில்லை. தன் ஆட்சிக்காலத்தில் தான் எந்தவிதமான தவறான முடிவையும் . . . .

 விவரம்»

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.