புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 
எமது மலையக மக்களை எவராலும் ஏமாற்ற முடியாது

எமது மலையக மக்களை எவராலும் ஏமாற்ற முடியாது

இ.தொ.கா தலைவர் முத்து சிவலிங்கம்

இ.தொ.கா என்பது நீண்ட வரலாற் றினையும் அனுபவத்தினையும் கொண்ட ஒரு கட்சியாகும். எமது சிந்தனைகளும் செயற்பாடுகளும் அனுபவத்தின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. சிறு பான்மை மக்கள் என்ற ரீதியில் நாம் எமது தேவைகளை அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்வோம்.

நிறைவேற்றி வைக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது. அரசியல் ஆசைபிடித்த பச்சோந்தி அரசியல்வாதிகள் மக்களை திசைதிருப்ப முயலுகின்றார்கள். இந்த பிரச்சினை எல்லா சமூகத்திலும் உள்ளது. ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் இ.தொ.காவின் பக்கம் இருக்கின்றார்கள் என்று இ.தொ.காவின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

மலையகத்தில் இ.தொ.கா வின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாகவே இருக்கின்றது. இ.தொ.காவை பலப்படுத்துவதன் மூலம் பல்வேறு உரிமைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதனை மக்கள் நன்றாக விளங்கிக் கொண்டுள்ளனர். சமூகத்தின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு சிறந்த தலைமைத்துவத்தினை வழங்கக் கூடிய ஆளுமை மிக்கவர் ஆறுமுகன் தொண்டமானே என்பதனையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எனவே இதனடிப்படையில் இ.தொ.கா அமோ வெற்றி பெறுவது உறுதியாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.