இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பிற்கு இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களையும்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களையும் அழைத்தது பொருத்தமான செயல்தான் என்று
இந்தியாவின் nலீws x ஆங்கில தொலைக்காட்சியில் வியாழன் இரவு 8.30 மணி நேயர் கருத்து
நிகழ்ச்சியில் கொழும்பில் இருந்தவாறே கலந்து கொண்ட ‘காயல் நலன்புரி சங்கத்தின் (காவாலங்கா)’
தலைவர் எம். எஸ். ஷாஜஹான் கூறினார்.
அதாவது சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற பட்டியலில் இலங்கை அதிபர்
அழைக்கப்பட்டுள்ளாரே தவிர தனிப்பட்ட அழைப்பு அல்ல.
ஆகவே, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இதனை எதிர்ப்பது அவர்களின் அரசியல் நாகரிகக்
குறைவையே காட்டுகிறது என்றார்.
அத்தோடு இந்நிகழ்ச்சியில் சிறப்பு கருத்தாளராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த சரவணன்
என்பவர் இலங்கை தமிழர்கள் எல்லோரும் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் என்றதை மறுத்த
இவர் இலங்கை தமிழர்களில் ஒரு துளி தான் இந்தியாவில் இருந்து வந்தவர்கள். மற்றவர்கள்
இம்மண்ணில் ஆதி குடிகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை தமிழர்களின் வரலாறு அறியாதவர்கள்
என்றும் இடித்துரைத்தார்.