தெற்கு உகண்டாவின் எல்லையோரத்தில் இருக்கும் இரு கிராமங்கள் தம்மை அயல் நாடான
ருவண்டாவுடன் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. இதற்காக இரு நாட்டு
எல்லைகளையும் திருப்பி எழுதும்படியும் இந்த கிராம மக்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
ஷென்யி மற்றும் கியார்வஹுடே என்ற இரு கிராம மக்களையும் உகண்டா நிர்வாகம் மறந்து
விட்டதாக அந்த கிராம மக்கள் கூறுகின்றனர். இங்கு பாடசாலை, நீர், வீதி என எந்த
அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால் வீதிக்கு அந்தப்புறம் ருவண்டாவில் அனைத்து
வசதிகளும் இருக்கின்றன என்று டெய்லி மொனிட்டர் பத்திரிகைக்கு ஊர் மக்கள் தமது நிலையை
கூறியுள்ளார்கள்.
எமது பூகோள நிலையாலேயே நாம் ஒதுக்கப்பட்டிருக்கிறோம் என்று கியார்வஹுடே கெளன்ஸில்
உறுப்பினர் குறிப்பிடுகிறார். நாம் உகண்டாவில் வாழ்கிறோம். ஆனால் ருவண்டாவிடம்
இருந்து அனைத்தையும் பெறுகிறோம் என்றும் அவர் கூறினார்.
எனினும் இந்த கிராம மக்களுக்கு வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்று உகண்டா நிர்வாகம்
வாக்குறுதி அளித்திருக்கிறது.