வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010

வஸிரிஸ்தானில் வான் தாக்குதல்; 15 தலிபான்கள் பலி; பலர் காயம்

வஸிரிஸ்தானில் வான் தாக்குதல்;
15 தலிபான்கள் பலி; பலர் காயம்

பாகிஸ்தானின் வஸிரிஸ்தான் மாகா ணத்தில் அமெரிக்க விமானங்கள் நடத்திய தாக்குதலில் 15 தலிபான் கள் உயிரிழந்தனர். சனிக்கிழமை ஒடல்டா கால் என்ற கிராமத்தின் மீது இந்த வான் தாக்குதல் நடத்த ப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானை அண்மித்துள்ள பாகிஸ்தானின் வஸிரி ஸ்தான் மாகாணத்தில் தலிபான்க ளின் செல்வாக்கு ஓங்கியுள்ளது.

நேட்டோப் படைகளுக்கான ஆயுத ங்கள் உணவுகள், மருந்துப் பொரு ட்கள் என்பன வஸிரிஸ்தான் வழி யாகவே ஆப்கானிஸ்தானுக்கு எடு த்து வரப்படுகின்றன. நேட்டோ படைகளின் வாகனங்களை தலி பான்கள் இப்பிரதேசத்தில் வைத்தே அடிக்கடி தாக்குகின்றனர்.

இதனால் இப்பிரதேசத்தை முழுமையாக நேட்டோப் படைகளின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர கடுமை யான முயற்சிகள் இடம்பெறுகி ன்றன. பாகிஸ்தான் அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல் இடம் பெறும் இவ்வாறான தாக்குதல்க ளால் வாஷிங்டன் இஸ்லாமா பாத்திடையே அடிக்கடி மனக் கசப்புகள் ஏற்படுவதுண்டு.

இந்நிலையில் இந்த வான் தாக் குதல்களை அமெரிக்கா நியாயப் படுத்தி வருகின்றது.

தலிபான்களின் முக்கிய தளபதி களைக் கொல்லவும் கைது செய் யவும் இந்த வான் தாக்குதல்கள் உதவுவதாக அமெரிக்கா தெரிவித் துள்ளது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
»