நல்லவர் தாழ்வதும் தீயவர் வாழ்வதும்
நல்லவர் தாழ்வதும் தீயவர் வாழ்வதும்
(சென்றவார தொடர்)
கோயிலை ஊருக்குப் பொதுவாக்கினார்கள்.
கோர்டில் தான் தோற்றுப்போனதை சகிக்க முடியாமல்,
யாரும் நினைக்க முடியாத ஒரு கொடிய காரியத்தை அவன் செய்தான்.
***
ஒரு நாள் இரவோடிரவாக ஓடு கழட்டி கோயிலுக்குள் இறங்கி,
அங்கிருந்த பெரிய ஐயனாரதும் சக்திகளதும் விக்கிரகங்களை,
சாக்கில் கட்டி தூக்கிக்கொண்டு போய்,
கோடரியால் அந்த விக்கிரகங்களைத் துண்டு துண்டாக வெட்டி,
இரவோடிரவாக யாரிடமோ கொண்டு சென்று விற்றுவிட்டான்.
மறுநாள் காலையில் விக்கிரகங்கள் காணாமல் போனது தெரிந்தவுடன்,
ஊரார் அவனைத்தான் சந்தேகப்பட்டனர்.
அவர்கள் பொலிஸ¤க்கு அறிவிக்க.
பொலிஸின் தேடலில் அந்த துண்டாடப்பட்ட விக்கிரகங்கள் கிடைத்தன.
சிவபாதம் ஜெயிலுக்குப் போனான்.
***
மறியலுக்குப் போய் திரும்பி வந்த பிறகும்,
அதே கொடுமைகளை விடாது செய்தான் அவன்.
எந்தக் கொடியவனுக்கும் பிள்ளைப்பாசம் இருக்கவே செய்யும்.
சிவபாதத்திற்கு அதுவும் இருக்கவில்லை.
தனது குழந்தைகளையும் அவன் படாதபாடு படுத்தினான்.
பச்சை மட்டையாலும், பாலைமட்டையாலும்,
அந்த பத்து வயது கூட ஆகாத சிறு பிள்ளைகளை,
ஒருநாள் அவன் மிருகத்தனமாய் அடித்ததை பார்த்து,
நான் நடுநடுங்கிப்போனேன்.
தந்தையின் முரட்டுத்தனத்திற்கு அந்தப் பிள்ளைகள் பழகியிருந்தார்கள்.
ஒருநாள் நான் கண்ணால் கண்ட காட்சி என்னை அதிர வைத்தது.
இந்தப் பிறவியில் அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது
அதென்ன காட்சி என்கிaர்களா? சொல்கிறேன்!
***
ஒருநாள் மதியம் ஒன்று ஒன்றரை மணியிருக்கும்.
சிவபாதம் நன்றாகக் குடித்துவிட்டு வந்து,
பெற்றோர், மனைவி, பிள்ளைகள் என எல்லோரையும் அடித்து
நொருக்கிவிட்டு,
வெறியில் முற்றத்திலிருந்த மாமரத்திற்குக் கீழ் மயங்கி விழுந்துவிட்டான்.
ஒருகால் நீட்டி ஒருகால் மடித்து,
உடுத்திருந்த சாறம் மேல் ஏறிக்கிடப்பது தெரியாமல்,
அலங்கோலமாய்க் கிடந்தான் அவன்.
***
அவனிடம் அடிவாங்கிய அவனது மூத்த மகன்.
தந்தை மயங்கிக் கிடந்ததைப் பார்த்தான்.
பிறகு சுற்றும் முற்றும் தன்னை யாராவது பார்க்கிறார்களா என
பார்த்தான்.
யாரும் தன்னை பார்க்கவில்லை எனத் தெரிந்த பின்,
மெல்ல எழும்பி அருகிலிருந்த சிரட்டை ஒன்றை கையில்
எடுத்துக்கொண்டு,
பக்கத்திலிருந்த முருங்கை மரத்திற்கு அருகில் சென்றான்.
அது நல்ல கோடை காலம்.
கறுத்தக்கம்பளியால் போர்த்தாப்போல,
முருங்கையின் அடி மரத்தை மசுக்குட்டிகள் மொய்த்துக் கிடந்தன.
அதன் அருகில் போன பையன்,
ஒரு தடியை எடுத்து,
தான் கொண்டு போன சிரட்டைக்குள்,
பத்துப்பதினைந்து மசுக்குட்டிகளைத் தட்டி எடுத்தான்.
பிறகும் ஒருதரம் சுற்றும் முற்றும் பார்த்தான்.
ஒருவரும் இல்லை என்று தெரிந்ததும்.
மெல்ல தந்தைக்கருகிலே சென்று,
திறந்து கிடந்த அவனது சாறத்திற்குள்ளே,
அந்த மசுக்குட்டிகளைக் கொட்டிய பின்,
சிரட்டையைத் தூர எறிந்து விட்டு,
ஓடிப்போய் தாயின் அருகிலே ஏதும் தெரியாதவன் போல்
படுத்துவிட்டான்.
அடுத்த வளவுக்குள் ஆட்டுக்கு தண்ணீர் வைக்க சென்ற நான்,
வேலி இடுக்கால் தெரிந்த அக்காட்சியைக் கண்டு,
விதிர்விதிர்த்துப் போனேன்.
***
இந்த இடத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த,
இன்னொருவர் பற்றியும் சொல்ல வேண்டும்.
அவருக்குப் பெயர் குலநாயகம்.
அவரை நாங்கள் குலநாயகம் அப்பு என்று தான் சொல்வோம்.
முறுக்கு மீசை, புகைக்கண்ணாடி, எந்த நேரமும் சிரித்த முகம்,
ஆறடி உயரம், வெற்றுடம்பில் ஒரு சால்வைத் துண்டு,
இவை அவரது அடையாளங்கள்.
சிவபாதம் எங்கள் ஊரின் துரியோதனன் என்றால்,
குலநாயகம் அப்புதான் எங்கள் ஊரின் தர்மன்.
***
எல்லோரையும் நேசிக்கிறவர் அவர்.
ஊரில் எவர் வீட்டில் ஒரு துன்பம் என்றாலும்,
அவர்தான் முதலில் நிற்பார்.
காலையில் கொக்கச்சத்தகத்துடன் புறப்பட்டு,
ஊர் முழுக்கச் சுற்றி வருவார்.
ஊரில் அங்கங்கே இருக்கும்,
நல்ல பொருட்கள் அனைத்தையும் பிடுங்கி வந்து,
வீடு வீடாய்க் கொடுப்பார்.
ஊரிலிருக்கும் அத்தனை பச்சிலைகளின் பெயர்களும் அவருக்கு
அத்துப்படி.
மனிதருக்கென்றில்லை ஆடு, மாடு, நாய், கோழி என்று,
எதற்கு நோய் வந்தாலும் அவரிடம் தான் ஓடுவோம்.
தன் கை வைத்தியத்தால் எல்லா நோயையும் துரத்துவார்.
மொத்தத்தில் ஊர் முழுவதினதும் அபாயரட்சகர் அவர்.
***
கோயில் விஷயத்தில்,
சிவபாதத்திற்கு எதிராய் வழக்குத் தொடுத்து,
கோயிலை மீட்டெடுப்பதில் முன் நின்றவர் குலநாயகம் அப்பு தான்.
கோயிலடியையே சுற்றிச் சுற்றி வருவார்.
கோயிலுக்குத் தேவையான தொண்டு அனைத்தும் செய்வார்.
எங்கள் ஐயனாரின் பரமபக்தர் அவர்.
***
இந்த இருவருக்கும் கட்டுரைத் தலைப்புக்கும்,
என்ன தொடர்பு என்று கேட்கிaர்களா?
அதைத்தான் சொல்லப்போகிறேன்.
***
தெய்வம், தந்தை, தாய், மனைவி, பிள்ளை என்று,
ஒருவரையும் மிச்சம் விடாமல், பெரும் கொடுமைகள் செய்த சிவபாதம்,
ஒருநாள் மத்தியானம் நன்றாகக் குடித்துவிட்டு,
மனைவி சமைத்து வைத்திருந்த ஆட்டிறைச்சிக்கறியை சாப்பிட்ட பின்,
முற்றத்திலிருந்த மாமரத்தின் கீழ் படுத்தவன்தான்.
ஆட்டம் அசைவில்லாமல் அவன் உயிர் பிரிந்துவிட்டது.
***
ஊரிலிருந்த எல்லோருக்கும் நன்மை செய்து,
ஆடு, மாடு, கோழி, மரம் என அத்தனையிலும் அன்பு காட்டி,
ஐயனார் கோயிலைச் சுற்றிச்சுற்றி தொண்டு செய்து வந்த
எங்களது தவநாயகம் அப்பு,
ஆறு மாதம் படுக்கையில் கிடந்து.
படுக்கையிலேயே மலசலம் கழித்து,
படுக்கைப்புண் வந்து வருந்தித்தான் செத்தார்.
புழுத்துச்சாவான், அழுந்நிச்சாவான், வருந்திச்சாவான் என்றெல்லாம்.
பலரிடமும் திட்டு வாங்கிய சிவபாதம்,
துன்பமோ, வேதனையோ இன்றி நிம்மதியாய்ச் செத்தான்.
அவனிடமிருந்து கோயிலை மீட்டெடுக்கவும்,
தெய்வத்தை மீட்டெடுக்கவும் படாதபாடு பட்டு,
ஊர் முழுவதற்கும் நன்மை செய்து,
ஊராரால் தெய்வப் பிறவி என்றும், நல்ல மனுசன் என்றும்,
கடவுள் அவதாரம் என்றும் பாராட்டப்பட்ட குலநாயகம் அப்பு,
கடும் துன்பத்திற்கும், வேதனைக்கும் ஆளாகி நிம்மதியின்றி இறந்து
போனார்.
இப்போது சொல்லுங்கள்.
ஒரு மனிதனின் மரணத்தை வைத்து,
அவனது வாழ்வை முடிவு செய்ய முடியுமா?
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்,
செவ்வியான் கேடும் கூட,
உலகியற்கையில் இருக்கத்தான் செய்கிறது.
அதனால்தான் சொல்லுகிறேன்.
ஒரு மனிதனின் மரணத்தை வைத்து.
அவனது வாழ்வை தயவு செய்து முடிவு செய்து விடாதீர்கள்.
பழைய சினிமாப்பாடல் நினைவுக்கு வருகிறது.
நல்லவர் தாழ்வதும், தீயவர் வாழ்வதும்,
செய்வதேனோ? இது தர்மம் தானோ?
உலகியலிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
நல்லவன் தாழலாம். தீயவன் வாழலாம்.
அது விதிவிலக்குகளின் விதி!
படுக்கையிலேயே மலசலம் கழித்து,
படுக்கைப்புண் வந்து வருந்தித்தான் செத்தார்.
***
புழுத்துச்சாவான், அழுந்நிச்சாவான்,
வருந்திச்சாவான் என்றெல்லாம்.
பலரிடமும் திட்டு வாங்கிய சிவபாதம்,
துன்பமோ, வேதனையோ இன்றி நிம்மதியாய்ச் செத்தான்.
அவனிடமிருந்து கோயிலை மீட்டெடுக்கவும்,
தெய்வத்தை மீட்டெடுக்கவும் படாதபாடு பட்டு,
ஊர் முழுவதற்கும் நன்மை செய்து,
ஊராரால் தெய்வப் பிறவி என்றும், நல்ல மனுசன் என்றும்,
கடவுள் அவதாரம் என்றும் பாராட்டப்பட்ட குலநாயகம் அப்பு,
கடும் துன்பத்திற்கும், வேதனைக்கும்
ஆளாகி நிம்மதியின்றி இறந்து
போனார்.
***
இப்போது சொல்லுங்கள்.
ஒரு மனிதனின் மரணத்தை வைத்து,
அவனது வாழ்வை முடிவு செய்ய முடியுமா?
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்,
செவ்வியான் கேடும் கூட,
உலகியற்கையில் இருக்கத்தான் செய்கிறது.
அதனால்தான் சொல்லுகிறேன்.
ஒரு மனிதனின் மரணத்தை வைத்து.
அவனது வாழ்வை தயவு செய்து முடிவு செய்து விடாதீர்கள்.
பழைய சினிமாப்பாடல் நினைவுக்கு வருகிறது.
நல்லவர் தாழ்வதும், தீயவர் வாழ்வதும்,
செய்வதேனோ? இது தர்மம் தானோ?
உலகியலிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
நல்லவன் தாழலாம். தீயவன் வாழலாம்.
அது விதிவிலக்குகளின் விதி!
|