ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 07
விகிர்தி வருடம் ஆனி மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, JULY 19, 2010
அதிகரிக்கும் சுறா தாக்குதல்
அதிகரிக்கும் சுறா தாக்குதல்
பெளர்மணி, அமாவாசை நாட்களில் தான் சுறா மீன்கள் மக்களை அதிகம் தாக்குதவதாக ஆய்வில்
தெரியவந்துள் ளது. அதிலும் கறுப்பு, வெள்ளை நீச்சல் உடைகளில் குளிப்பவர்களையே
சுறாக்கள் அதிகம் தாக்குவதும் தெரிய வருகிறது. அமெரிக்காவைப் பொறுத்த வரை குறிப்பாக
ஆகஸ்ட் மாதங்களில் தான் சுறா தாக்குதல்கள் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத் தில் உள்ள வோலுசியா பகுதி கடற் கரையில் தான்
உலகிலேயே மிக அதிக அளவில் சுறா தாக்குதல்கள் நடக்கின்றன. இந்தப் பகுதியில் கடந்த 50
ஆண்டுகால சுறா தாக்குதல்களை புளோரிடா பல்கலைக்கழகம் ஆய்வு செய்ததில் இந்த விவரங்கள்
தெரிய வந்துள்ளன.
குறிப்பாக பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் தான் அதிகளவில்
தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த நாட்களில் கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் என்பது
குறிப் பிடத்தக்கது. பெளர்ணமி மற்றும் அமா வாசை தினங்கள் மீன்களின் இனப் பெருக்க
நாட்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நாட்களில் சுறாக்கள் உண்ணும் மீன்களின்
நடமாட்டத்துக்கும் சுறாக்களின் தாக்குதல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும்
தெரிகிறது. ஆகஸ்ட் மாதத்தில் ஏன் இந்தத் தாக்குதல்கள் அதிகம் நடக்கின்ற என்றால்
அமெரிக் காவில் அது கோடை காலம் என்ப தால் அந்த மாதத்தில் கடற்கரையில் அதிக மக்கள்
கூடுவதே காரணம் என்கிறது ஆய்வொன்று!
நட்சத்திரத்தில் தண்ணீர்
ஹென் 300 ஏ என்ற நட்சத்திரத்தைச் சுற்றி மணல் துகள்கள் மிதந்து கொண் டிருப்பதாக
ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த நட்சத்திரத்தில்
இருந்து வெளி யேறிய ஒட்சிசனும் சிலிக்கனும் தாக்க முற்று சிலிக் கனீரொட்சைடு, அதாவது
மணல் உருவாகியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல டபிள்யூ 43 ஏ என்ற நட்சத்திரத்தில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்துக்
கொண்டிரு ப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 8 ஆயிரத்து 500
ஒளிவருட தூரத்தில் இருக்கும் அந்த நட்சத்திரத்தில் இருந்து நீர் வேகமாக வெளியேறு
வதால் அந்த நட்சத்திரத்தின் சுழற்சியே மாறுபடுகிறது.
அதாவது தோட்டத்தில் நீர்
பாய்ச்சும் குழாயிலிருந்து வெளிவரும் நீரால் அந்தக்குழாய் அங்குமிங்கும் குதிப்பதைப்
போல டபிள்யூ 43 ஏ நட்சத்திரமும் துள்ளிக் குதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
ஒரு வானமும், இரண்டு சூரியன்களும்
பெரிய நட்சத்திரங்களின் வெப்பக் கதிர்வீச்சால் ஆவியாக்கப்பட்ட நட்சத் திரங்கள் தான்
கிரகங்களாக மாறுகின் றன என்ற கருத்து ஏற்கனவே உள்ளது. தற்போது அதை மெய்பிக்கும்
வகையில் ஒரு அதிசயக் கிரக அமைப்பு ஆராய் ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில்
இருந்து 45 ஒளிவருட தொலைவில் நம்முடைய சூரியனைப் போன்ற இரட்டை நட்சத்திரங்கள்
நெருக்கமாக அமைந்துள்ளன.
அவை ‘காமாசெபி’ என்ற பெயரால் அழைக் கப்படுகின்றன.
வியாழனைவிட 1.76 மடங்கு பெரிய வாயு கோள கிரகம் ஒன்று இந்த இரண்டு நட்சத்திரங்களை
யும் (சூரியனை யுரேனஸ் கிரகம் வலம் வரும் தொலைவில்) வலம் வந்து கொண்டிருக்கிறது.
இரண்டு நட்சத்திரங்கள் நெருக்கமாக இருக்கும் அதிவெப்ப நிலையில் இந்தக் கிரகம் உள்ளது.
எனவே கவர்ந்திழுக்கப்பட்டு ஆவியாக்கப்பட்ட நட்சத்திரங்கள் தான் கிரகமாகி வலம்
வருகின்றன என்பதற்கு இந்தக்கிரக அமைப்பு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.
அஸ்வத்தாமன் யார்?
மஹாபாரத போர் நடந்த துவாபார யுகத்தில் பிறந்தவர் அஸ்வத்தாமன். பாண்டவர்களுக்கும்
கெளரவர்களுக்கும் போர்க்கலையை கற்றுத்தந்த குரு துரோணச்சாரியாரின் மகனான இவர் அந்த
யுகத்தின் மாவீரர்களில் ஒருவர்.
மரணமற்ற அமரத்துவம் பெற்ற அஸ் வத்தாமன் இப்பொழுதும்
உயிருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. மஹாபா ரதப் போரில் கெளரவர்கள் பக்கத்தில்
நின்று துரோணாச்சாரியார் பாண்டவர் களை எதிர்த்துப் போர் புரிந்தார். தந்தையும்,
மகனுமாக பாண்டவர்களின் சேனையைப் பெருமளவிற்கு அழித்தனர்.
அப்பொழுது அஸ்வத்தாமன் போரில் மடிந்து விட்டதாக கிருஷ்ணர் ஒரு புரளியைக் கிளப்பினார்.
அது உண்மை தானா என்று அறிய தருமனான யுதிர் ஷ்டிரரை துரோணாச்சாரியார் வினவினார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த யுதிர்ஷ்டிரர், “இறந்தது அஸ்வத்தாமன், ஆனால் அது மனிதனா
அல்லது யானையா என்று எனக்கு தெரியா” என்று கூறினார். தருமன் இவ்வாறு கூறியது கேட்ட
துரோணாச்சாரியார் துயரத்தால் மயக்கமுற்றார். அஸ்வத்தாமன் அமரத்துவம் பெற்றிருப் பதை
மறந்தார்.
மயக்கமுற்ற துரோணாச் சாரியாரை பாண்டவர் படைத் தளபதி திரஷ்டத்துய்மன்
வெட்டிச் சாய்த்தான். அஸ்வத்தாமன் சாகவில்லை. அஸ்வத்த மன் என்ற பெயர் கொண்ட யானைதான்
போரில் மடிந்தது. ஆனால் எல்லோரும் துரோணாச்சரியாரின் மகன் மாண்டதாகவே கருதிக்
கொண்டனர்.
தனது தந்தை கொல்லப்பட்டது அஸ்வத்தாமனை பெரிதும் காயப்படுத் தியது. பாண்டவர்களின் ஆறு
புதல்வர் களை அஸ்வத்தாமன் கொன்றான். மஹாபாரத போருக்கு பிறகு அந்த யுகத்தை சேர்ந்த
ஒவ்வொருவரும் ஒருவர் பின் ஒருவராக மரணமுற்றனர்.
ஆனால் அஸ்வத்தாமன் இன்னமும்
வாழ்கிறான். அவனது நெற்றியில் மணி ஒன்று இருந்தது அதனை பிடுங்கி எறிந்தான். ஆனால்
மரணமடையவில்லை. ஆசீர்கார் கோட்டைக்கு அருகில் நர்மதை நதிக்கரையில் உள்ள ஜபல்பூர்
குடிமக்கள் அஸ்வத்தாமன் அங்கு உலவி வருவதாக கூறுகின்றனர்.
தனது நெற்றி யில் இருந்து
கொட்டிக் கொண்டிருக்கும் உதிரத்தை நிறுத்த எண்ணெய்யையும் மஞ்சளையும் அஸ்வத்தாமன்
கேட்பதாக அம்மக்கள் கூறுகின்றனர்.