வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத
ஒன்றாகும்.
மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால்
தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும்
உருவாகியுள்ளது. எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும்
இன்றியமையாததாக உள்ளது.
இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
குடல் சுத்தமாகும்
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில்
முதன்மையாக குடல் சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே
மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள
கழிவுகளானவை முற்றிலும் வெளியேறிவிடும். தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில்
தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும்.
பசியைத் தூண்டும்
தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும்
நச்சுக்கள் வெளியேறி விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். இரத்த செல்கள்
உற்பத்தியாகும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்தத்திலுள்ள
சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை
கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.
தலைவலியை தடுக்கும்
பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும்.
அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால்,
உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும்.
அல்சரைத் தடுக்கும்
காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும்
வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தார், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.
எடையை குறைக்க உதவும்
எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து
வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால்
தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
பொலிவான சருமத்தைக் கொடுக்கும்
குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி
பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து
வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.
வயிற்றில் புண் ஏற்பட என்ன காரணம்?
இதோ தீர்வு தரும் டிப்ஸ்
உணவு பழக்கவழக்கங்களை சரியான முறையில் பின்பற்றாமல் இருப்பது, ஸ்லிம்மாக வேண்டும்
என்ற ஆசையில் பட்டினி கிடப்பது போன்றவர்களை ஆட்டிப்படைக்கிறது இந்த வயிற்றுப்புண்.
குடலின் மேற்பரப்பில் உள்ள மியூகோஸா படலம் என்ற சவ்வு நாள்பட்ட, எரிச்சல்
உண்டாக்கும் அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு சிதைந்து விடும்.
அதிக அமில சுரப்பு மற்றும் பெப்சின் (ஜீரண என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா
மற்றும் பொரித்த உணவுகளாலும் புண்கள் தோன்றும். வயிற்றில் ஓட்டை ஏற்பட்டு புண்கள்
உருவாகும்.
காரணம் என்ன?
பதற்றம், கவலை, பொறாமை, காரசாரமான உணவு, மசாலா அதிக அமிலத்தை சுரக்க வைத்து, புண்களை
உண்டாக்கும். வயிற்றில் புண்களை தோற்றுவிக்கும் இன்னொரு முக்கிய காரணம்
Helicobacterpylori (ஹெலிகோபேக்டர் பைலோரி) என்ற ஒரு வகை பாக்டீரியா.
இந்த பாக்ரீரியா அசுத்தமான சூழ்நிலை, குடிநீர், உணவுப்பொருட்களால் பரவுகிறது.
வயிற்றில் அமிலத்தை நீர்க்க வைத்து, கேஸ்ட்ரைடீஸ் எனும் வீக்கத்தை உண்டாக்கி,
நாளடைவில் இந்த வீக்கம் புண்ணாக மாற இந்த எச்.பைலோரி கிருமிகள் உதவுகின்றன.
எப்படி தடுக்கலாம்?
அதிக அளவு மது அருந்துதல், புகைபிடித்தல், தவறான உணவுப்பழக்கங்கள், நேரம் காலமின்றி
உண்பது, அசுத்தமான பழக்கங்கள், கைகழுவாமல் உணவு உண்பது, நகத்தை கடிப்பது, அதிக டீ,
காப்பி குடிப்பது. ஆஸ்பிரியன் போன்ற மருந்துகள்.
அதிக மன அழுத்தம், பதற்றம், அடிக்கடி உணர்ச்சி வசப்படுதல். இவற்றை தவிர்த்தால்,
வயிற்றில் புண் ஏற்படுவதை தவிர்க்கலாம். அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால்
குடல் புண் குணமாகும். காரம் மற்றும் அசைவ உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உபயோகிப்பதை தவிர்க்கவும்.
பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு,
சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம்
சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.
சோற்று கற்றாழை சாறில் பச்சை பயறை ஊற வைத்து, காயவைத்து பிறகு கஞ்சி காய்ச்சிக்
குடித்தால் வயிற்று வலி, குடல் புண், குடல் நோய்கள் அனைத்தும் தீரும்.
உடலை சுத்தமாக்கும் உணவுகள்
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தும் உணவு வகைகள் சிலவற்றை
பற்றி தெரிந்து கொள்ளுங்கள்,
எலுமிச்சை
எலுமிச்சையில் விட்டமின் சி இருப்பதால் இதனை ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம், உடலின்
மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். அதுமட்டுமின்றி,
எலுமிச்சை உடலின் அளவை சீராக பராமரிக்கும்.
மாதுளை
மாதுளையில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இவை உடலில் இரத்த ஓட்டத்தை
அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கும்படி செய்வதோடு, உடலை
சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவும்.
பூண்டு
பூண்டில் அல்லிசின் என்னும் கெமிக்கல் உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள தீங்கு
விளைவிக்கும் பாக்டீரி யாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து, உடலில் இருந்து
வெளியேற்றும்.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் மிகவும் சக்தி வாய்ந்த க்ளின்சிங் தன்மையைக் கொண்டுள்ளது. மேலும் இதில்
சல்பர், வைட்டமின் சி மற்றும் அயோடின் போன்றவைகளும் உள்ளது.
பீட்ரூட்
பீட்ரூட்டில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள்
போன்றவற்றுடன், பீட்டா - சியானின் என்னும் நிறமி, உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை
அழித்துவிடும்.
அழிவை ஏற்படுத்தும் சாசேஜ் , ஜங்க் உணவுகள்
சுவை நன்றாக இருப்பதால், நாம் சில வகை உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். ஆனால்,
அவ்வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறது.
உதாரணமாக, சில வகையான சிறந்த உணவுகள் நமது எடை குறைப்பிற்கு உதவும், வேறு சில நமது
அறிவுத்திறனை ஊக்குவிக்கும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் உணவுகள். இதற்கு
மாறாக சிலவகை உணவுகள் மூளைச் செயல்பாட்டை அழிக்கும் உணவாகவே இருக்கிறது.
அண்மையில் மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியின் படி, ஜங்க் உணவுகள்
நமது மூளையில் உள்ள இரசாயனத்தை மாற்றி, அவை மன அழுத்தம் மற்றும் கவலை நிலைக்கு
ஆளாக்கும். அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள் சாப்பிட்டு பழகி விட்டு, அதனை நிறுத்தும்
போதும் இதே போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த வகை உணவுகள், டோபமைன் உருவாவதை
தடுக்கிறது. டோபமைன் என்பது சந்தோஷம் மற்றும் நல்ல உடல் வளம் பெற உதவி செய்யும்
இரசாயனம்.
அது மட்டுமல்லாது, டோப மைன் அறிவுத்திறன், விழிப்புணர்வு, ஊக்கத்திறன் மற்றும்
ஞாபகத்திறன் போன்றவற்றிற்கும் உதவுகிறது. அதேபோன்று சாசேஜ் உணவுகளால் மனிதன்
அதிகமான ஆரோக்கியமான பிரச்சினைகளை சந்திக்கிறான்.
சாசேஜ் அதிகம் உட்கொள்வதால் பெருங்குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள்
அதிகரிப்பதாக ஜேர்மனி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில்
பங்கேற்ற 4,500 நபர்களில் பெரும்பாலானோர் பெருங்குடல் தொடர்பான நோய்களால்
அவதிப்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
இது புற்று நோய்க்கான அறிகுறியென தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், புதுவகை உணவு
பழக்கவழக்கங்களால் நோய் வாய்ப்புகளும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டனர்.
மேலும் இறைச்சி போன்ற உணவு வகைகளை நெருப்பிலிட்டு வாட்டும்போது வெளியேறும் புகையை
சுவாசிப்பதும் ஆபத்து என தெரிவித்துள்ளனர். வயிற்றுப் போக்கு, கடும் தலைவலியை
ஏற்படுத்தும் சூயிங்கம் மெல்லும் பழக்கத்தினால் நிறைய ஆரோக்கிய பிரச்சினைகள்
ஏற்படும். அதில் மூட்டு வலிகள், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஜங்க் உணவுகளை உண்ணத் தூண்டும் ஆய்வுகளில் சூயிங்கம் மெல்லுவதால், அதிலும் புதினா
சுவை கொண்ட சூயிங் கம்மை மெல்லுவதால், ஆரோக்கியமான உணவுகளான பழங்கள் மற்றும்
காய்கறிகள் சாப்பிடும் அளவு குறைவதாக தெரிய வந்துள்ளது.
மூட்டு வலிகளை ஏற்படுத்தும் வாயில் உள்ள தசைகளுக்கு அளவுக்கு அதிகமாக வேலை
கொடுத்தால், அதனால் மூட்டுகளில் பிரச்சினைகள் அதிகமாகும். அதிலும் சூயிங்கம்மை
தொடர்ந்து மென்றவாறு இருந்தால், அதனால் தாடையை மண்டையுடன் இணைக்கும் மூட்டுகள்
மற்றும் தசைகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயுடன் ஆரோக்கியமாக வாழுதல்
பாகம் 2 (தொடர்ச்சி)
கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயுள்ளோரில் அஞ்சைனா, மாரடைப்பு, பக்கவாதம்,
சிறுநீர்த்தொற்று, தோலில் கிருமித் தொற்று, ஆண்களில் ஆண்மைக்குறைவு, சிறுநீரக
செயலிழப்பு, விழித்திரையில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் குளூகோமா போன்றவற்றால்
நிரந்தரப்பார்வை இழப்பு, கால்களில் வி'ப்புண் மற்றும் என்புத் தொற்று போன்றன
ஏற்பட்டு கால் துண்டிக்கப்பட வேண்டிய அவசியமேற்படுதல் போன்ற பலவிதமான சிக்கல்கள்
ஏற்படலாம். வைத்தியரின் ஆலோசனைக்கமைய மருந்துகளைப் பாவித்தும், சரியான உணவுப்பழக்கம்
மற்றும் வாழ்க்கை முறை மாற் ங்களை மேற்கொண்டும் இந்நோயைச் சிறந்த கட்டுப்பாட்டில்
வைத்தி ருப்பதன் மூலம் இச்சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம், அல்லது ஏற்க னவே
ஏற்பட்டிருப்பினும் மேலும் தீவிரமடைவ தைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
நீரிழிவு நோயை எவ்வாறு கண்டு பிடிக்கலாம்?
1. சிறுநீரில் குளுகோஸ் உள்ளதா என பரிசோதித்தல் – இது மிக இலகுவான ஒரு பரிசோதனையாக
இருந்தாலும், நீரிழிவு நோய் உள்ளதா அல்லது இல்லையா என உறுதிப்படுத்தாது.
2. இரத்தத்தில் உள்ள குளுகோசின் அளவை கணிப்பிடுதல் –
12 மணித்தியாலங்களுக்கு தண்ணீரைத் தவிர வேறு எந்த பானங்களோ அன்றி உணவுகளோ எடுக்காமல்
மேற்கொள்ளப்படும் இரத்தப்பரி சோதனையில் குளுகோசின் அளவு 126 mg/dl லும் அதிகமாக
இருப்பது, இரண்டு சந்தர்ப்பங்களில் காணப்படின் நீரிழிவு நோய் உள்ளது என்று உறுதி
செய்யலாம்.
3. இரத்தத்தில் உள்ள HbA1c ஐ அளவிடுதல் – இதன் அளவு 48 mmol/mol (6.5மூ) ஐ
விட அதிகமாக இருப்பின் நீரிழிவு நோயை உறுதி செய்யலாம். மேலும் கடந்த நான்கு மாத
காலப்பகுதியில் இரத்தத்தில் குளுகோசின் கட்டுப்பாடு எவ்வாறு இருந்தது என்று
இதன்மூலம் அறிய முடியும்.
அதிகமான சந்தர்ப்பங்களில் வழமையாக மேற்கொள்ளப்படும் இரத்தப் பரிசோதனை (routine
blood test) மூலமோ அல்லது வேறு ஏதாவது மருத்துவப் பிரச்சனைக்காக மேற்கொள்ளப்படும்
பரிசோதனைகள் மூலம் தான் நீரிழிவு நோய் உள்ளது என்று கண்டறியப்படுகின்றது.
நீரிழிவு உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் எவை?
குறுகிய காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் (இரத்தத்தில் குளுகோசின் அளவு மிக
அதிகமாக இருப்பதனால்)
இரண்டாவது வகை நீரிழிவு நோய் உள்ளோரில் இது பொதுவாக ஏற்படுவதில்லை.
அநேகமாக, முறையாக சிகிச்சையளிக்கப்படாத முதலாவது வகை நீரிழிவு நோய்
உள்ளோரில் மிக விரைவாக குளுகோசின் அளவு அதிகரிக்கும் போது இது ஏற்படலாம்.
எனினும் அரிதாக, சிகிச்சையளிக்கப்படாத இரண்டாவது வகை நீரிழிவு நோய் உள்ளோரிலும் இது
ஏற்பட சாத்தியம் உள்ளது. இரத்தத்தில் குளுகோசின் அளவு மிகவும் ஆபத்தான அளவிற்கு
அதிகரிக்கும் போது உடலிலிருந்து அதிக நீர் வெளியேறுவதால் dehydration மயக்க நிலை
மற்றும் உயிராபத்து ஏற்படலாம்.
நெடுங்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள்
நீண்ட காலமாக இரத்தத்தில் உள்ள குளுகோசின் அளவு கட்டுப்பாடின்றி அதிகமாக இருக்கும்
போது, அது சிறிது சிறிதாக குருதிக் குழாய்களைப் பாதிக்கின்றது.
குளுகோசின் அளவு நியமிக்கப்பட்ட அளவை விட ஓரளவே அதிகமாக இருப்பினும் கூட இது
நிகழலாம். இதனால் நீரிழிவு ஏற்பட்டு சில வருடங்களில் பின்வரும் சிக்கல்கள்
குருதிக்குழாய்ச் சுவர்கள் தடிப்படைந்து அடைப்பு ஏற்படுதல் - இதுவே அஞ்சைனா,
மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு காரணமாகும்.
சிறுநீரகப் பாதிப்பு – படிப்படியாக சிறுநீரகங்கள் செயலிழக்கலாம்.
கண் பிரச்சினைகள்- விழித்திரையில் உள்ள குருதிக்குழாய்களில் ஏற்படும் பாதிப்பு
காரணமாக பார்வை பறிபோகலாம்..
நரம்புகளில் பிரச்சனைகள் உணர்ச்சியற்ற நிலைமை
கால்களில் பிரச்சினைகள் – நரம்பு மற்றும் குருதிக் குழாய்கள் பாதிக் கப்படுவதால்.
இது ஆண்மைத் தன்மை குறைதல் – இரத்தோட்டம் மற்றும் நரம்புகளின் பாதிப்பு காரணமாக இச்
சிக்கல்களின் வகைகளும், தீவிரமும் ஆளுக்கு ஆள் வேறுபடும். சிலரில் எவ்வித
சிக்கல்களும் தோன்றாது. இரத்தத்தில் உள்ள குளுகோசின் அளவு சாதரணத்தை விட சிறிது
அதிகமாக இருப்பவர்களுக்கு மிகவும் குறைந்த சிக்கல்களே ஏற்படும். மேலும் உயர் இரத்த
அழுத்தம் போன்ற ஏனைய ஆபத்தான காரணிகளைக் கட்டுப்படுத்தி ஏற்படக்கூடிய சிக்கல்களைக்
குறைத்துக் கொள்ளலாம்.
இரண்டாவது வகை நீரிழிவு நோயிற்குரிய முறையான சிகிச்சையின் நோக்கங்கள் யாவை?
நீரிழிவு நோயை முற்றாகக் குணப்படுத்த முடியாவிடினும் கூட திறம்பட சிகிச்சை அளிக்க
முடியும். இரத்தத்தில் குளுகோசின் அளவை சாதாரண அளவில் பேணும் போது அறிகுறிகள்
மறைவதுடன் மீண்டும் நலமாக உணர முடியும். மேலும் இவர்களுக்கு ஏற்படக்கூடிய
சிக்கல்களும் அரிதாகும்.
எனவே வழங்கப்படும் சிகிச்சையின் இலக்கானது,
01 இயலுமான வரைக்கும் சாதாரண அளவில் குளுகோசைப் பேணுதல்.
02 உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்திரோல் போன்ற ஏனைய
ஆபத்தான காரணிகளைக் கட்டுப்படுத்துதல்.
03 ஏற்பட்டுள்ள சிக்கல்களை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்தல்.