இருவருட காலம் ஆட்சியிலி ருக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தும் கடந்த ஜனவரி
மாதம் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தியது, தான் செய்த மிகப் பெரிய தவறான
முடிவு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த ஒரு முடிவைத்
தவிர தனது ஆட்சியில் தான் எடுத்த எந்த முடிவு குறித்தும் தனக்கு வருத்த மில்லை. தன்
ஆட்சிக்காலத்தில் தான் எந்தவிதமான தவறான முடிவையும் எடுக்கவில்லை எனவும்,
சாத்திரத்தை அதீதமாக நம்பியதால் தனக்கு அன்று தோல்வி நிலை ஏற்பட்டது எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்த லில் தமது முன்னணிக்கு 117 இடங்களில் வெற்றி
கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு தனக்கும்
மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே மூன்று சந்திப்புகள் இடம்பெற்றதை அவர்
உறுதிப்படுத்தும் அதேவேளை, மூன்றாவது சந்திப்பு ரகசியமானது, அது குறித்த விவரங்களை
வெளியிட முடியாது எனவும் கூறினார்.
நாட்டில் ஜனாதிபதியாக உள்ளவர் எவ்வளவு முறை வேண்டுமானாலும் மீண்டும் அப்பதவிக்கு
போட்டியிடலாம் எனக் கூறும் சர்ச்சைக்குரிய 18 ஆவது சட்டத் திருத்தத்தை கொண்டு
வந்ததையும் அவர் நியாயப்படுத்தியுள்ளார்.
முதல் முறையாக அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகளுக்கு
பணம் கொடுத்தார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறும் குற்றச்சாட்டையும் மஹிந்த
ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் சில ஊழல் பேர்வழிகளை தான் காப்பாற்றியுள்ளதையும் அவர்
ஒப்புக்கொண்டார். ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டதற்கும், பிரகித்
எக்நலிகொட காணாமல் போனதற்கும் காரணமானவர்கள் தற்போதைய அரசில் உள்ளனர் என்று தான்
நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.