புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 
வாக்காளர்களுக்கு ஜனாதிபதி சிறிசேன ஆலோசனை

வாக்காளர்களுக்கு ஜனாதிபதி சிறிசேன ஆலோசனை

எதிர்வரும் பொதுத் தேர் தலில் பாரா ளுமன்றத்துக்கு பொருத்தமான வர்களை மட் டுமே தெரிவு செய்ய வேண்டி யது நாட்டில் உள்ள எல்லா வாக்காளர்களி னதும் மிகப் பெரும் பொறுப் பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நற்பெயரை மதித்து பாதுகாக்கின்ற, நாட்டுக்காக பணி செய்யக்கூடிய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்கள் தங்களது அறிவு, புத்திக்கூர்மை மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான முன் அனுப வங்களை வைத்து இந்த தெரிவை மேற் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகள் மக்க ளுக்கான தங்களது கடமைப் பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றாத காரணத்தினால் அவர்களது நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் இராஜதந்திரிகள், அவர்களது பதவிகளின் கடமைப் பொறுப்புக்களை ஏற்கின்றபோது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அவர்கள் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.