தொடரும் அச்சுறுத்தலால் பொலிஸ் பாதுகாப்பு ஏற்ப ¡டு யாழ். போதனா வைத் தியசாலையின்
புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத் தியக்கலாநிதி என். ஜெயக் குமாரின் வீட்டில் மீது
மீண்டும் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாக யாழ். பொலிஸ்
நிலையத்தில் புதனன்று முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில்
வந்த இனந்தெரியாத இருவரே இத்தாக்குதல் முயற்சியை மேற்கொள்ள முயற்சித்ததாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை
முன்னர் ஒரு தடவையும் வைத்தியர் இல்லம் தாக்கப்பட்டது.
இதன் காரணமாக இவரது வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம்
திகதி இரவு 10 மணியளவில் வைத்தியரின் வீட்டின் மீது தாக்குதல் முயற்சியொன்று
மேற்கொள்ளப்பட்டதாகவும், வீட்டிற்கு முன்னால் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர்
நடமாடியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையிலேயே பாதுகாப்பு வழங்கப்பட்டதாக யாழ்.
பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜெப்ரி தெரிவித்துள்ளார்.
அவரது வீட்டுப் பகுதியில் பொலிஸ் ரோந்து அதிகரிக் கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்
தெரிவித்தார்.