லேக்ஹவுஸ் இந்து மன்றத்தின் நூல் வெளியீடு 10ம் திகதி
லேக்ஹவுஸ் இந்து மன்றத்தின் நூல் வெளியீடு 10ம் திகதி
லேக்ஹவுஸ் இந்துமன்றம் வெளியிடும் ‘பஞ்சபுராண தோத்திரத்திரட்டு’ என்ற நூலின்
வெளியீட்டு விழா எதிர்வரும் 10ம் திகதி சனிக் கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடை
பெறுகிறது.
சைவப் புலவர் கலாபூஷணம் சு. செல்லத் துரையினால் தொகுத்து வழங்கப்பட்ட
பஞ்சபுராண தோத்திரத்திரட்டு என்ற நூலின் வெளியீட்டு விழா கொழும்பு வெள்ளவத்தை ருத்ரா
மாவத்தையில் அமைந்துள்ள தமிழ்ச் சங்கத்தின் சங்கரப் பிள்ளை மண்டபத்தில் மாலை 5.00
மணிக்கு நடைபெறவுள்ளது.
திருஞானசம் பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தர
மூர்த்திநாயனார் ஆகியோரால் பாடி அருளப்பெற்ற பஞ்ச புராண தோத்திரங்களிலி ருந்து 10
பாடல்கள் வீதம் தொகுக்கப்பட்டு நூலுருவாக வெளியிடப்படவுள்ளது.
அறநெறிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் ஒவ் வொருவருக்கும் இந்நூல்
கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் லேக்ஹவுஸ் இந்து மன்றம் பஞ்சபுராண தோத்திரத்
திரட்டு என்ற இந்த நூலை வெளியிட முன்வந்தது. லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பந்துல
பத்மகுமார இந்த நூலை வைபவ ரீதியாக வெளியிட்டு வைக்க இந்துசமய, இந்து கலாசார
திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் முதல் நூலைப் பெற்றுக் கொள்வார்.
லேக்ஹவுஸ் நிறுவன ஆசிரியர் பீட பணிப்பாளர் சீலரட்ண செனரத், நிறுவனத்தின் நிதிப்
பணிப்பாளர் ஷாண் சண்முகநாதன், லேக்ஹவுஸ் நிறுவன பொது முகாமையாளர் அபய அமரதாஸ ஆகியோர்
கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.