காமெடி நடிகர் வடிவேலுவால் ரூ. 1 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சென்னை பொலிஸ்
கமிஷனரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் வடிவேலுவின்
உதவியாளர் சங்கர், கமிஷனர் திரிபாதியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில்
இணையதள ஆசிரியர் ஒருவர் வடிவேலுவிடம் ரூ. 45 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணையை
பொலிசார் தொடங்கினர்.
இந்நிலையில் பொலிஸ் கமிஷனர் திரிபாதியிடம் சம்பந்தப்பட்ட
இணையதள ஆசிரியர் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் மலேசியாவை சேர்ந்த மைக்கேல் கானா எனக்கு கொடுத்துள்ள பொது அதிகார
பத்திரம் அடிப்படையில் இந்த மனு சமர்ப்பிக்கப்படுகிறது.
மலேசியாவில் கலை நிகழ்ச்சி
நடத்துவதாக நடிகர் வடிவேலு கடந்த 2007 ஆம் ஆண்டு ரூ. 4 இலட்சம் பணம் வாங்கியுள்ளார்.
ஆனால் அவர் கலை நிகழ்ச்சிக்கு வரவில்லை.
அவர் வாங்கிய பணத்தையும் திருப்பி
கொடுக்கவில்லை. இதனால் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மைக்கேல் கானாவுக்கு ரூ. 1
கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பணத்தை கேட்டதற்காக என் மீது பொய் புகார்
கொடுத்துள்ளார். வடிவேலு மீதும், அவரது உதவியாளர் சங்கர் மீதும் உரிய சட்டபூர்வ
நடிடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.