கொலிவுட்டில் மயக்கம் என்ன, ஒஸ்தி போன்ற படங்களில் நடித்த ரிச்சா, விளம்பரப்
படங்களிலி ருந்து மீண்டும் சினிமாவுக்குத் திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழில் மேற்குறித்த இரண்டு படங்களும் சரியாக ஓடாததால் ஆந்திராவிற்குச் சென்றார்
ரிச்சா. அங்கும் அவர் நடித்த படம் தோல்வியைத் தழுவியது.
பின்னர் பட வாய்ப்புக்கள் கிடைக்காதமையால் விளம்பரப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் தற்போது கொலிவுட்டில் தன்னுடன் நடித்த சில கதாநாயகர்களைச் சந்தித்துப்
பேசி, வாய்ப்பும் கேட்டு வருகிறார்.
கதாநாயகி விடயத்தில் தனுஷ் அதிகமாக தலையிடமாட்டார் என்பதால் சிம்புவை நெருங்கிப்
பேசியுள்ளார்.
ஆனால் சிம்புவே ஏற்கெனவே நமக்கு நேரம் சரியில்லை என்று தனக்குத் தானே நினைத்தாரோ
என்னவோ, ரிச்சாவிற்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அதனால் அடுத்து கோடம்பாக்கத்தில் வேறு நல்ல கதாநாயகர்களை தேடிக்கொண்டிருக்கிறார்
ரிச்சா.