அரசாங்க தகவல் திணைக்களம் யாழ். மாவட்ட செயலகத்துடன் இணைந்து யாழ். பொது நூலக
கேட்போர்கூடத்தில் நடாத்தும் மாவட்ட அபிவிருத்தியில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு
தொடர்பான ஊடகக் கருத்தரங்கு எதிர்வரும் 23ம் திகதி காலை 9.00 மணிக்கு
ஆரம்பமாகவுள்ளது.
பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தலைமையில் நடைபெறும் இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்.
மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு
கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகவும், யாழ்.
மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா சிறப்பு அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் அங்கு முக்கிய உரை நிகழ்த்தவிருப்பதுடன்
களனிப் பல்கலைக்கழக வெகுஜன ஊடக கற்கைப் பிரிவின் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல,
தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன், சட்டத்தரணியும் சிரேஷ்ட
ஊடகவியலாளருமான ஏ.பீ. வைஸ் ஆகியோர் சிறப்புரையும் நிகழ்த்துவர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள அச்சு மற்றும் இலத்திரனியல்
ஊடகவியலாளர்கள் இதில் பங்குபற்றவுள்ளதாக பிரதித்தகவல் பணிப்பாளர் ஹில்மி முஹம்மத்
தெரிவித்துள்ளார்.