வெளிநாட்டு பணம் கிடைக்கும் அதிர்ஷ்டமுள்ளவரா நீங்கள்?
வெளிநாட்டு பணம் கிடைக்கும் அதிர்ஷ்டமுள்ளவரா நீங்கள்?
விபரீத ராஜயோகம்
(சென்றவார தொடர்)
இந்த இடமும் பலம் பெற்றிருக்க வேண்டும். இனி, சாதகத்திலுள்ள பதினோராம் வீடு. இது
ஆதாய வீடு. முதலீடு செய்யப்பட்ட ஒரு தொகைக்கு பல மடங்கு தொகை கூடுதலாக வருவாய்
கிடைப்பதைத்தான் ஆதாயம் என்கிறோம். இந்த வகையில் பயன்பெற 11ஆம் வீடும், அந்த
வீட்டுக்குரிய கிரகமும் பலம் பெற்றிருக்க வேண்டும்.
இலக்கினத்திற்கு அடுத்த வீடு இரண்டாம் வீடு. இது தனஸ்தானம் எனப்படும். இந்த இரண்டாம்
வீட்டுக்குரிய கிரகம் அதே வீட்டில் இருந்தாலும், மற்றொரு வீட்டில் அமர்ந்து உச்சம்
பெற்றிருந்தாலும், குறைந்த பட்சம் நட்புராசி ஒன்றிலாவது அமர்ந்திருந்தாலும்,
இரண்டாம் வீடு சுபக்கிரகங்களால் பார்க்கப்பட்டாலும், சுபக்கிரகங்கள் அவ்வீட்டில்
சேர்க்கை பெற்றிருந்தாலும் அச்சாதகருக்கு தனயோகம் ஏற்படும்.
நவக்கிரகங்களுள் வியாழன் தனகாரகன் எனப்படுவார். சுக்கிரன் செளபாக்கியங்களுக்கும்
அதிபதியென வர்ணிக்கப்படுகிறார். சாதகத்தில் இவ்விரு கிரகங்களும் பலம் பெற்றிருப்பது
ஒரு மேலதிக தகைமையாகும்.
இந்தத் தனஸ்தானம், பூர்வ புண்ணியஸ்தானம், பாக்கியஸ்தானம், ஆதாயத்தானம் ஆகியன நன்றாக
அமையப்பெற்ற சாதகர்களுக்கு, அந்தஸ்தானாதிபதிகளின் தசாபுத்தி அந்தரம் நடக்கிற
காலங்களில் பெரும் பொருள் வரத்தோ, எதிர்பாராமல் இன்னொருவரின் சொத்துக்கள் கைமாறுவதோ,
ஓர் அரசனுக்கு நிகரான அந்தஸ்தோ ஏற்படுகிறது.
இலக்கனத்திலிருந்து எண்ணி வரும் இரண்டாமிடத்தில் வளர்பிறைச் சந்திரன்,
ஐந்தாமிடத்தில் வியாழன், பதினோராமிடத்தில் சுக்கிரன் என்ற விதத்தில் கிரக அமைப்பைப்
பெற்றவர்கள் எக்காலமும் தளராத பொருளாதாரக் கட்டுக்கோப்பை உடையவராயிருப்பர். பல
தொழில்கள், பல்லா யிரக்கணக்கான வேலை யாட்கள் இவர்கள் வசமிருக்கும்.
பூர்வ புண்ணியத் தானாதிபதியும் ஆதாயத் தானாதிபதியும் இணைந்து இரண்டா மிடத்தில்
அமையப் பெற்ற சாதகர்களுக்கு 2ஆம், 5ஆம், 11ஆம் வீடுகளுக்குரிய கிரகங்க ளின்
தசாபுத்திகள் நடைபெறுகிற சமயம் செல்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது.
இதற்கு வியாழனும் சுக்கிரனும் ஆட்சி, அல்லது உச்ச நிலையை எய்தியிருக்க வேண்டியது
முக்கியம். அத்துடன் 2அம், 5ஆம், 11ஆம் இடத்துக் கிரகங்களுடன் சேர்ந்தோ, அல்லது
அவைகளை பார்த்தோ இருக்க வேண்டுமென்பதும் அவசியம்.
இரண்டாம் வீட்டுக்குரிய கிரகமும், 11ஆம் வீட்டுக்கிரகமும் ஒருவர் வீட்டில் மற்றவர்
மாறியமர்ந்து பரிவர்த்தனம் பெற்றால், அந்தக் கிரகங்களில் ஒன்றின் தசாபுத்தி
நடைபெறும் காலத்தில் அளவு கடந்த விதமாகப் பணம் சேரும்.
ஒன்பதாம் வீட்டுக்குரிய கிரகம் ஒன்பதாம் வீட்டிலேயே அமர்ந்திருந்தால் அது
‘இலட்சுமியோகம்’ எனப்படும். ஆட்சி பெற்ற இந்த ஒன்பதாம் வீட்டதிபதியின் தசையில்
11ஆம் வீட்டதிபதியின் புத்தியில் எதிர்பாராத வகையில் பெரும் பொருள் வரவுக்கு
வாய்ப்புண்டு. பெரும்பாலும் தந்தை வழியாலும், வெளிநாட்டுத் தொடர்பாலும் பெரும்
ஆதாயங்களை எதிர்பார்க்கலாம்.
ஒருவரின் சாதகத்தில் மூன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் உச்சம் பெற்று அவை உச்சம் பெற்ற
இடங்கள் 2ஆம், 5ஆம், 9ஆம், 11ஆம் வீடுகளாயிருந்து, அந்தக் கிரகங்களின் தசாபுத்தி
நடக்கிற காலங்களில் அவர் தாய் நாட்டில் மட்டுமல்ல, பிறநாடுகளிலும் தொடர்புள்ள பெரும்
தொழிலதிபராக உயர முடியும். மேடத்தில் சூரியனும் இடபத்தில் சந்திரனும், கடகத்தில்
வியாழனும், கன்னியில் புதனும், துலாத்தில் சனியும், விருச்சிகத்தில் ராகு,
கேதுக்களும், மகரத்தில் செவ்வாயும், மீனத்தில் சுக்கிரனும் உச்சநிலை எய்துவன.
இலக்கினமும் 4ஆம், 7ஆம், 10ஆம் வீடுகளும் கேந்திரங்கள் எனப்படும்.
இலக்கினத்திலிருந்து 3,6,11 ஆகிய இடங்களில் ஏதாவதொன்றில் இராகு அல்லது கேது
அமையப்பெற்று, இவர்களுக்கு கேந்திரஸ்தானங்களில் சுக்கிரன், புதன் போன்ற சுபர்கள்
அமர்ந்திருக்க, ராகு அல்லது கேதுவை வியாழன் பார்த்தால், அது எதிர்பாராத பெரும்
பொருள் வரவுக்கு உத்தரவாதமளிப்பதாகும். சுவீப்பில் முதற்பரிசு கிடைக்கக் கூடிய
அமைப்பென்று இதனைச் சொல்லலாம். இலக்கினத்திலிருந்து எண்ணிவரும் 6ஆம், 8ஆம், 12ஆம்
வீடுகள் துர்ஸ்தானங்கள் எனப்படும்.
(தொடரும்...)
6ஆம் வீடு நோயையும், 8ஆம் வீடு மரணத்தையும், 12ஆம் வீடுகளுக்கும் அதிபதிகளான
கிரகங்கள் ஒருவர் வீட்டில் மற்றவர் மாறியமர்ந்து பரிவர்த்தனம் பெறுவதை விபரீத
ராஜயோகத் என்பர். மேற்படி கிரகங்களில் ஏதாவது ஒன்றினது தசாபுத்தி நடக்கிற
நேரத்தில், அத்தகைய அமைப்பைப் பெற்ற ஒருவர், அவர் எத்தகைய ஓட்டாண்டியாக இருப்பினும்
ஒரேநாளில் இலட்சாதிபதியாகிவிடுவார். இந்த மூன்று வீடுகளின் அதிபதிகளும் ஆறிலோ,
எட்டிலோ, பன்னிரண்டிலோ ஒன்று கூடியிருந்தாலும் கூட மேற்படி யோகமுண்டு.
தனுலக்கிலத்தில் பிறந்த ஒரு சாதகருக்கு ஆறாதிபதி சுக்கிரனும், எட்டாதிபதி
சந்திரனும், பன்னிரண்டாதிபதி செவ்வாயும் தனஸ்தானத்தில் (மகரத்தில்) ஒன்று
கூடியிருந்தார்கள். செவ்வாய் உச்சமாயிருந்தார். சாதாரண கூலித்தொழிலாளியாக
வறுமையுடனும் வியாதியுடனும் போராடிக் கொண்டிருந்த அவர், கடந்தாண்டில் இழுக்கப்பட்ட
ஒரு சீட்டிழுப்பில் முதற் பரிசாக இரண்டு கோடி ரூபாவுக்கு மேல் வென்றார். இது விபரீத
ராஜயோகத்தின் சிறப்பைச் சொல்லும் ஓர் அனுபவம்.
இந்த 6ஆம், 8ஆம், 12ஆம் வீடுகளுக்குரிய கிரகங்கள் 2ஆம், 5ஆம், 9ஆம், 11ஆம்
வீடுகளுக்குரிய கிரகங்களுடன் சேர்ந்திருப்பதோ, அல்லது அவைகளை நோக்குவதோ அதிர்ஷ்ட
பங்கத்தைத் தரும். அதாவது, கிடைத்த செல்வத்தை அனுபவிக்க முடியாமல் செய்துவிடும்.
நிறையப் பணமிருந்தும் நினைத்ததைச் சாப்பிட முடியாமல் உடல் நலம் கெட்டிருக்கும்
சிலருக்கு. இன்னும் சிலருக்கோ குடும்பத்தில் மனைவி மக்களால் பிரச்சினைகள் தோன்றி
அமைதியைக் குலைக்கும். எதிரிகளால் வழக்கு விவகாரங்களில் வாழ்நாளெல்லாம் பணம்
விரயமாகிக் கொண்டிருக்கும் சிலருக்கு. இப்படி எத்தனையோ தொல்லைகள்.
6ஆம், 8ஆம், 12ஆம் வீடுகளிலோ, அவற்றுக்குரிய கிரகங்களுடனோ இந்த 2ஆம், 5ஆம், 9ஆம்,
11ஆம் வீட்டுக்கிரகங்கள் ஓரிருவரோ அல்லது எல்லோருமோ போய்ச் சேர்ந்து விட்டாலும்
மோசந்தான். முக்கியமாக ராகு அல்லது கேது 5ஆம் வீட்டில் நிலைகொண்டிருந்தால் மன அமைதி
அடியோடு போய்விடும்.
இவ்வாரம் முதல் வாசக நேயர்களின் சோதிட ஐயப்பாடுகள் குறித்த கேள்விகளுக்கும் ஏற்ற
ஆய்வுபூர்வமான பதில்களை கூறும் பகுதியை ஆரம்பித்துள்ளேன். இது சோதிட ஆர்வலர்களுக்கு
அது பற்றிய தங்கள் ஞானத்தை விருத்தி செய்யக்கூடிய களமாகவும் அமையும்.
முதலாவது கேள்வியை கொழும்பு தேவஸ்தானம் ஒன்றிலிருந்து குருக்கள் ஒருவர் கேட்கிறார்.
துலா லக்கினம், 4இல் சுக்கிரன், 5இல் செவ்வாய், புதன், வியாழன், ராகு, 6இல் சூரியன்
8இல் சனி, 9இல் சந்திரன், 10இல் கேது. தற்காலம் சூரிய திசையில் வியாழ புத்தி
நடக்கிறது.
நெடுங்காலமாக தொய்வு நோயினால் அவதிப்படுகிறேன். இதிலிருந்து பூரண சுகம் கிடைக்குமா?
என் தாய்க்கு 97 வயதாகிறது. அவளுக்கு என் கையால் கொள்ளி போடக்கிடைக்குமா? சாகும்வரை
வயிற்றுச் சோற்றுக்குப் பஞ்சமில்லாமல் வாழ்வேனா?
பதில்: துலா லக்கினத்திற்கு சூரியன் பாதகஸ் தானாதிபதி அவர் நோய்க்குரிய இடமான ஆறில்
அமர்ந்திருக்கிறார். தற்போதைய வியாழ புத்தியென்பது நோய்க்குரிய ரோகஸ்தானாதிபதியின்
புத்தி. ஆனாலும் வியாழன் இருக்குமிடம் திருகோணமாகிறது. அதற்கும் ஒரு குறை
ஏற்படுகிறது. காரணம் வியாழனின் கூட இருக்கும். செவ்வாயும் ராகுவும் பாவிகள்.
இப்போதைய வியாழ புத்தியைவிட அடுத்து வரும் சனி புத்தி நலம் தருவதாக இருக்கும்.
முழுமையாய் நோய் குணமடைய தெய்வ அனுக்கிரகம் தேவை. வயதான தாயாருக்கு இறுதிக்
கிரியைகள் செய்ய உங்களுக்கு வாய்ப்புண்டு. சாதகத்தில் முக்கிய கிரகங்கள் பலம்
பெற்றதால் ஜீவனம் தொடர வாய்ப்புண்டு.