புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 

ஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில்

ஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில்;

அங்குரார்ப்பண விழாவில் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

ஆடை உற்பத்தித் துறையில் வருடாந்தம் ஏற்றுமதி வருமானமாக ஐந்து பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெற்றுக்கொள்கிறது என்றும், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் இது நாப்பது சதவீதமாகும் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

௦7 ஆவது டெக்ஸ்டெக் ஸ்ரீலங்கா 2016– சர்வதேச எக்ஸ்போ கண்காட்சியை கொழும்பு டி.ஆர் விஜேவர்தன மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா கண்காட்சி கேட்போர் கூட மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைத்த பின்னர் அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

இந்தக் கண்காட்சி நிகழ்வில் இந்தியத் தூதரக முதலாவது செயலாளர் கார்த்திக் பிரபாத் உட்பட வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் இங்கு கூறியதாவது,

ஒரே கூரையின் கீழ் ஆடை உற்பத்திப் பொருட்களையும், புடவை உற்பத்திப் பொருட்களையும் கண்காட்சிக்கு வைத்து, வாடிக்கையாளர்களையும், இந்தத் துறையில் ஆர்வம் கொண்டுள்ளோர்களையும் சந்திக்க வைத்த ஏற்பாட்டாளர்களை நான் பாராட்டுகின்றேன்.

இந்தக் கண்காட்சிகள் மூலம் நாட்டின் ஏற்றுமதித் துறை முன்னேற்றமடையும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். இலங்கைக்கு எதிர்காலத்தில் ஜிஎஸ்பி பிளஸ்ஸும் இலங்கைக்கு கிடைக்க உள்ளது.

சர்வதேச கொள்வனவாளர்கள் இந்தத் துறையில் மேலும் ஆர்வத்தை அதிகரிக்கும்வகையில் புடவை ஏற்றுமதித் துறையிலும், ஆடைக் கைத்தொழில் துறையிலும் ஈடுபட்டு வரும் முதலீட்டாளர்கள் தமது தொழிற்திறனை இன்னும் விரிவாக்க ஆர்வம் வேண்டும்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சு கைத்தொழில் துறையிலும் ஏற்றுமதி வர்த்தகத்திலும் எதிர்காலத்தில் முன்னேற்றம் அடைவதற்கான அனைத்துவிதமான அனுசரணைகளையும் உதவிகளையும் வழங்குவதோடு அந்தத் துறையை மேம்படுத்த தன்னாலான அத்தனை பங்களிப்புகளையும் நல்கி வருகின்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.