மன்மத வருடம் ஆடி மாதம் 16 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 17
SUNDAY AUGUST 02 2015

Print

 
A/L உயர்தர மாணவர்கள் இருவருக்கு பரீட்சை தடை

அலைபேசியை எடுத்துச் சென்றனர்

A/L உயர்தர மாணவர்கள் இருவருக்கு பரீட்சை தடை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பரீட்சை மத்திய நிலையத்துக்குள் அலைபேசியை எடுத்துச் சென்ற மாணவர்கள் இருவருக்கு பரீட்சை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார தெரி வித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள பாடசாலையொன்றில் பரீட்சை மத்திய நிலையமாக தொழிற்படும் மத்திய நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருவரே இவ்வாறு அலைபேசியை எடுத்துச் சென்றுள்ளனர்.

அவ்விருவர் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி பரீட்சைகள் சட்டத்தின் பிரகாரம் ஆகக் கூடுதலான தண்டனை வழங்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பரீட்சை மண்டபத்துக்குள் அலைபேசியை எடுத்துச் செல்வது தடையாகும். அவ்வாறு அலைபேசியை எடுத்துச் செல்லுகின்ற பரீட்சார்த்திகளை கண்டால் அவர்கள் தொடர்பில் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னரேனும் பரீட்சைகள் திணைக்களத்துக்கு தகவல் தருமாறு ஏனைய பரீட்சார்த்திகளிடம் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]