மன்மத வருடம் ஆடி மாதம் 16 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 17
SUNDAY AUGUST 02 2015

Print

 
'பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா' நூல் வெளியீடு 12 ஆம் திகதி

'பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா' நூல் வெளியீடு 12 ஆம் திகதி

காத்தான்குடியில் விமர்சையான ஏற்பாடு

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச் சருமான தாஜுல் மில்லத் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 12ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.ஏ.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார். நூலின் அறிமுகத்தை மூத்த எழுத்தாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான தமிழ்த்திரு. சிவலிங்கம் சதீஸ்குமார் மேற்கொள்ள நூல் விமர்சனத்தை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம்.அஸ்ரப் செய்வார். விழாவில் தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் சிறப்புரை ஆற்ற மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் பிரதி தவிசாளர் ஏ.எம்.எம்.தெளபீக் நன்றியுரையாற்றுவார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]