அரசியல் சாத்தியமே இல்லாதது தமிbழம். அது அமைந்தால் நல்லதும் அல்ல என்று தி ஹிந்து
ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும்
கூறியுள்ளதாவது,
உங்கள் மீதான விமர் சனங்களுக்கு வருவோம். தமிழ் மக்கள் பிரச்சி னைகளில் நீங்களும்
சரி தி ஹிந்துவும் சரி தமிழ் விரோத அணுகு முறையோடே செயல்படுகிaர்கள் என்ற
குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிaர்கள்?
இந்தக் கேள்விக்குக் கொஞ்சம் விரிவாகப் பதில் அளிக்க விரும்புகிறேன். ஓர் உண்மை
தெரியுமா? இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி இந்திய அளவில் வேறு எந்தப் பத்திரிகை
யைவிடவும் அதிகமாக எழுதியிருப்பது தி ஹிந்து தான். அதிலும் 1983 இனப்படு கொலைக்குப்
பின், தமிழ் ஆயுதக் குழுக்களின் செயல்பாடு களையும் தமிழர் போராட்டங்களையும் பற்றி
விரிவான செய்திகளையும் கட்டுரைகளையும் தி ஹிந்து வெளியிட்டிருக்கிறது. நானும் டி.எஸ்.
சுப்பிரமணியனும் சேர்ந்து எடுத்த பிரபாகரனின் விரிவான பேட்டி இந்திய அளவில்
பேசப்பட்ட ஒன்று. ஜெயவர்த்தனா அதிபராக இருந்தபோது தி ஹிந்து செய்தியாளர்
டி.பி.எஸ்.ஜெயராஜ் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். நான்
கொழும்பு சென்று ஜெயவர்த்தனாவுடன் பேசினேன். சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பில்
குரல் எழுப்பினோம். அவர் விடுவிக்கப்பட்டார். இவை எல்லாம் வரலாறு.
விடுதலைப் புலிகளை ஆரம்பத்தில் நாங்கள் பரிவோடு தான் அணுகினோம் அவர்களுடைய
நியாயங்களை எழுதினோம். ஆனால், ரொம்ப சீக்கிரமே அவர்கள் மிகக் குரூரமாகத் தங்கள்
முகத்தை வெளிப்படுத்தினார்கள். ஏனைய ஆயுதக் குழுக்கள், போராட்டத் தலைவர்கள்
எல்லோரையும் அழித்தொழித்தார்கள். பின், வெவ்வேறு காலகட்ட உரையாடல்களின் போது
பிரபாகரனின் அரசியல் அறியாமையும் அவருடைய நோக்கங்களும் புரிந்து விட்டன. உண்மையில்,
பிரபாகரன் ஒரு போல்பாட்டிஸ்ட். துப்பாக்கிகள் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையில்
துளியும் பேச்சுவார்த்தைகளிலோ ஜனநாயகத்திலோ இல்லை. ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம்
தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போதே இது எனக்குத் தெளிவாகிவிட்டது.
தொடர்ந்து அவர்கள் நடத்திய அரசியல் படுகொலைகள், செய்த அட்டூழியங்கள்,
பேச்சுவார்த்தைகளில் அவர் வீணடித்த பொன் னான வாய்ப்புகள், எல்லாவற்றுக்கும் மேல்
முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை புலிகளை எதிர்த்து எழுத இவை எல்லாம்தான் காரணங்கள்.
புலிகள் எதிர்ப்பு என்பது எப்படி இலங்கைத் தமிழர்கள் அல்லது தமிழ் விரோதப்
போக்காகும்? இலங்கைப் பிரச்சினை மட்டும் அல்ல காவிரி, முல்லைப் பெரியாறு என எந்தப்
பிரச்சினையாக இருந்தாலும் நாம் பெரிய அளவிலான கவனம் கொடுக்கவே செய்தி ருக்கிறோம்.
ஆனால், எது உண்மையில் சாத்தி யமோ, எது உண்மை நிலையைப் பிரதிப லிக்கிறதோ அதையே
எழுதுகிறோம். போலித் தனமோ, இரட்டை வேடமோ போடுவது இல்லை.
புலிகள் எதிர்ப்புதான் தமிbழ எதிர்ப்பாகவும் உருவெடுத்ததா?
இல்லை. தொடக்கம் முதலே தி ஹிந்து தனித் தமிbழம் என்ற கருத்தாக்கத்தை எதிர்த்தே
வந்திருக்கிறது. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையும் அதுதான். அரசியல் சாத்தியமே
இல்லாதது தமிbழம். அது அமைந்தால் நல்லதும் அல்ல.
தமிbழம் சாத்தியம் இல்லை, நல்லது இல்லை என்று எந்த அடிப்படையில் சொல்கிaர்கள்?
அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை அது. இங்கிருந்து நாம் இலங்கைத் தமிழர்கள் என்ற
சொல் வழியே பார்க்கும் மக்கள் வேறு. அங்குள்ள மக்கள் வேறு. மலையகத் தமிழர்கள்
தனித்திருக்கிறார்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் தனித்திருக்கிறார்கள் அவர்களுடைய
பிரச்சினைகள் இங்கு பேசப்படுவது இல்லை. ஈழத்தின் பரப்பாகக் கேட்கப்பட்ட வட - கிழக்கு
மாகாணங்களை எடுத்துக்கொண்டால், கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரு பங்கினர் தமிழர்
அல்லாதவர்கள்.
வட பகுதியோடு இணைவதில் விருப்பம் இல்லாதவர்கள். அவர்களுடைய நியாயங்களை விவாதிக்க
இங்கு அனுமதிக் கப்படுவது கூட இல்லை.
அப்புறம், அரசியல்ரீதியாக, பொருளாதார ரீதியாக, புவியரசியல் ரீதியாக நீடிக்க வாய்ப்பே
இல்லாதது அது. முக்கியமாக, வியூக முக்கியத்துவம். அந்தப் பகுதியை ராணுவ ரீதியாக
யாரும் விட்டுவைக்க மாட்டார்கள் - ஒருபோதும் அது நீடிக்க முடியாதது. கடைசியில்
அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பின் கீழ்,
சுயாட்சிக்கு இணையான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுதான் இலங்கைத் தமிழர்களுக்கு
அமைதியையும் நன்மைகளையும் தருமேயன்றி பிரிவினை அல்ல.
இறுதிப்போரில் போர்க் குற்றங்கள் நடந்தது தொடர்பாக என்ன சொல்கிaர்கள்?
போர்களை ஆதரிப்பவன் அல்ல நான். முன்னரே சொன்னேன் பிரிவினையும் துப்பாக்கிகளும்தான்
தீர்வு என்ற முடிவில் பிரபாகரன் தீர்மானமாக இருப்பதை உணர்ந்த பின்தான் விடுதலைப்
புலிகளைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தேன் என்று. இறுதிப் போரின் போது போர்க்
குற்றங்கள் புலிகளாலும் நடத்தப்பட்டிருக்கின்றது. நிச்சயம் குற்றவாளிகள்
தண்டிக்கப்பட வேண்டும். அதேசமயம், இந்த விவகாரம் மட்டும் பிரதானம் இல்லை
மீள்கட்டமைப்பும் உச்சபட்ச அதிகாரப் பகிர்வும் வேண்டும். அவைதான் தமிழர்களின்
எதிர்கால நலனை நிர்ணயிக்கும்.