மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
கிரிக்ெகட் வீரர்கள் இணையத்திலும் கண்காணிப்பு

கிரிக்ெகட் வீரர்கள் இணையத்திலும் கண்காணிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் (ஐ.சி.சி) மோசடிகளைத் தடுப்பதற்கான வழியாக, சந்தேகிக்கப்படும் வீரர்களின் சமூக ஊடக இணையத்தளங்களும் ஏனைய தனிப்பட்ட சாதனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.சி.சி ஊழல் எதிர்ப்புப் பிரிவின் புதிய திட்டத்தின்படி, வட்ஸ்அப், ஸ்னப்சற் போன்ற தொலைபேசி செயலிகளின் தனிப்பட்ட செய்திகளையும் சமூக ஊடக இணையத்தளங்களின் செய்திகளையும் தரவிறக்கம் செய்யும் அதிகாரம், ஊழல் ஒழிப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

ஏற்கெனவே டென்னிஸ் சார்பாகக் காணப்படும் நடைமுறைகளே, இங்கும் பின்பற்றப்படவுள்ளன. தற்போதுள்ள நடைமுறையில், வீரர்களின் தொலைபேசி அழைப்பு விவரங்களை, ஐ.சி.சி கோருவதற்கு மாத்திரமே வழிவகை காணப்படும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]