ஆறு உப குழுக்களின் அறிக்கைகள் அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிப்பு
நாடு முழுவதும் விநியோகிக்க பிரதமர் பணிப்பு
ஜனவரியில் முழு நேர விவாதம்
அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களின் அறிக்கைகள் நேற்றையதினம் அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிர மசிங்க இந்த அறிக்கைகளை சமர்ப்பித்தார்.
உபகுழுவின் அறிக்கைகள் தொடர்பாக எதிர்வரும் ஜனவரி 9ஆம், 10ஆம், 11ஆம் திகதிகளில் முழுநேர விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதற்கு முன்னர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி கூடவுள்ள அரசியலமைப்பு சபையில் வழிநடத்தல் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அடிப்படை உரிமைகள், நீதிமன்றம், நிதி, தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொலிஸ், அரச சேவைகள் மற்றும் மத்தியும் சுற்றயல் உறவுகள் பற்றிய ஆறு உபகுழுக்களின் அறிக்கைகளே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
விவரம்» |