மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
கற்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

கற்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

கற்பிட்டி பிரதேசத்தில் மீனவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து, கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளார்.

அதன்படி அவர் புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

இதனையடுத்து வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்போது கற்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. கற்பிட்டி, கந்தக்குளி பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுடன் பிரதேசத்தில் உள்ள மற்றொரு மீனவர்கள் குழுவினர் மோதிக்கொண்டதில் அப்பிரதேசத்தில் நேற்று அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீன்பிடி படகுகள், மோட்டார் சைக்கிள், சிறிய ரக லொறி போன்றவற்றிற்கு தீ வைத்ததால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

நிலமையை கட்டுப்படுத்த பிரதேசத்திற்கு மேலதிக பொலிஸ் குழுக்கள் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அனுப்பப்பட்டதுடன், தற்போதும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் சிலர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]