மாகாண, உள்ளூராட்சி மட்டங்களில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்
மாகாண, உள்ளூராட்சி மட்டங்களில்
அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்
மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டாலே நாட்டில்
ஜனநாயகம் நிலைபெறுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சிக் காலத்திற்குள் நிலையான ஜனநாயகம்
ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
திருகோணமலையில் தேசிய சுற்றுச்சூழல் மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில்
அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி பதவி ஏற்றதன் பின்பு சுற்றாடலில் அதிக கவனம் செலுத்தி வருவதனை நாங்கள்
எல்லோரும் அறிவோம்.அவர் அவரது காலப்பகுதியில் பல்வேறு விடயங்களை செய்ய முயற்சிகளை
மேற் கொண்டு வருகின்றார்.
இந்த நாட்டில் நாட்டின் பொருளாதாரம்,நாட்டினுடைய கலாசாரம், மக்கள் மத்தியில்
ஒற்றுமை,ஒருமைப்பாடு,நல்லிணக்கம்,புரிந்துணர்வு,வெவ்வேறு மக்கள் மத்தியில்
உள்ளநாட்டின் தேசியப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு மற்றும் ஜனாதிபதி முறைமையை
ஒழிக்கவும்அவர் முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றார்
இந்த நாட்டின் சர்வாதிகாரத்தை இல்லாமல் செய்வது ஜனநாயகத்திற்கு உரிய
இடத்தைக்கொடுப்பது போன்ற பல்வேறு கருமங்களில் அவரது அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்று கூறுகின்றபோது தனக்குள்ள அதிகாரங்களைத்தான்
விட்டு விட்டு தான் செல்லத்தயாராக இருப்பதாகவும் அவர் தெட்டத் தெளிவாக கூறுகின்றார்.
இந்த நாட்டின் பல தலைவர்களாக இருந்தவர்கள் இவ்விதமான பல உறுதி மொழிகளை கூறினார்கள்.
அவை பின்னர் நிறைவேற்றப்பட வில்லை.ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது
ஜனாதிபதி அதிகாரத்தை நீக்கி இந்த நாட்டின் ஒரு சர்வாதிகார ஆட்சி இருக்க்க்கூடாது.
ஒரு ஜனநாயக முறைமை இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அந்த அதிகாரங்களை பகிர்ந்து
கொடுக்கவும் முன்வந்துள்ளார்.அவ்வாறு அவருக்கு எங்களுடைய பாராட்டுதல்களைத்
தெரிவிக்க வேண்டும் அது எங்களுடைய கடமையாகும்.என நான் நினைக்கின்றேன்.
அதற்கு எமது பங்களிப்பை நாம் வழங்க வேண்டும்.ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்திற்குள்
நாட்டில் நிலையான ஜனநாயகத்தை ஜனாதிபதி ஏற்படுத்தவேண்டும்.ஜனாதிபதி அவர்கள் தீர்க்க
வேண்டும் என நினைக்கும பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர் வு ஏற்பட வேண்டுமாக
விருந்தால் இந்த நாட்டில் ஒரு நிலையான ஜனநாயகம் நிலவவேண்டும்.
சர்வாதிகார முறைக்கு இடமில்லை எனக்கருதுகின்ற ஒரு ஜனாதிபதி ஜனநாயகம் முழுமையாக இந்த
நாட்டில் நிலவுவதற்கு அதிகாரம் எந்தளவிற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதனையும்
உணர்ந்திருப்பாரென நான் கருதுகிறேன்.
இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைபேற வேண்டுமாக இருந்தால் மாகாணங்களுக்கும்
உள்ளுாராட்சி சபைகளுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். என்பதனை ஜனாதிபதி
தெளிவாக புரிந்திருப்பார் என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் இருக்க முடியாது.
அவ்விதமாக மக்களினுடைய இறைமைகள் அந்தந்த மக்களின் இறைமையின் அடிப்படையில் பயன்
படுத்த சந்தர்ப்பம் இருந்தால்தான் நாட்டில் ஜனநாயகம் உண்மையாக நிலவக்கூடிய நிலைமை
ஏற்படும். இந்தவிடயத்தில் நாட்டின் ஜனாதிபதி, மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் இந்த
நாட்டின் பல பிரச்சினைகளை தீர்ப்பதில் மிகவும் நிதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர்
ஜனாதிபதி தனது பதவிக்கால ஆட்சியில் இருந்து நீங்குகின்ற பொழுது இந்த நாடு வேறு ஒரு
நாடாக மாறவேண்டும். இன்றைக்கு இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் சர்வதேசத்ததால்
மதிக்கப்படுகின்றது. ஜனாதிபதி நாடுகளுக்குச்செல்லும் போது சிறப்பான வரவேற்பு
அழிக்கப்படுகின்றது. பலரும் அவரை மதிக்கின்றார்கள். அவரைப்பார்க்கின்ற போது நாங்கள்
பெருமையடைகின்றோம். வெளிநாடுகள் ஏன் செய்கின்றார்கள் என்றால் நாட்டில் ஆட்சி
மாற்றம் ஏற்பட்ட பிறகு கொள்கையளவில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. நாட்டில்
வாழ்கின்ற மக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த இந்த
அரசாங்கம் செயற்படுகின்றது. என்ற கருத்து சர்வதேச த்தின் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஆதலால் இந்தக்கருமத்தில் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் வெற்றி பெறுவதற்கு
நாமெல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்
இந்த நாட்டில் நிலையான ஜனநாயகம் ஏற்படுவதற்கு அதிகாரங்கள் முறையாக
பகிர்தளிக்கப்படவேண்டும் அப்போதுதான் ஜனநாயகம் நிலைபெறும் எனவும் எதிர்கட்சித்
தலைவர் சுட்டிக்காட்டினார்.